திருமாலின் தசாவதாரம் (1)--மச்ச அவதாரம்
திருமாலின் அவதாரங்கள்
திருமால் காக்கும் கடவுள் ஆவார்.இவர் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார்.
தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின் அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது
முதல் அவதாரம்
I) மச்ச அவதாரம்
மச்சம் என்றால் மீன் என்ற பொருள்படும்.
கிருதயுகத்தில் திருமால் மீன் வடிவில் அவதாரம் எடுத்து உலக உயிர்களையும் வேதங்களையும் காப்பாற்றினார் .
குதிரையின் முகம் கொண்ட சோமுகாசுரன் என்கின்ற அரக்கன் வேதங்களை பிரம்மாவிடம் இருந்து திருடி சென்று கடலுக்கு அடியில் வைத்துக் கொண்டான் அப்போது உலகத்தின் பிரளயம் ஏற்பட்டபோது வைவஸ்தமனு , சப்தரிஷிகள், மூலிகைகள் , விதைகள் ஆகியவற்றைக் கொண்ட படகினை , ஏற்பட்ட பெரும் பிரளயத்திலிருந்து திருமாலின் முதல் அவதாரமான மச்சாவதாரம் எடுத்து காப்பாற்றினார் .
சோமுகாசுரன் என்ற அரக்கனிடமிருந்து வேதங்களை மீட்டு பிரம்மனிடம் ஒப்படைத்தார்.
மச்ச அவதாரம் என்பது உடலின் மேல்பகுதி நான்கு கைகளும் மனித உடல், கீழ் பகுதி மீன் உருவமும் கொண்டதாகும்
Comments
Post a Comment