Posts

Showing posts from February, 2021

வாழ்வியல் கலை - மன அழுத்தம் உடைத்தெறிதல்

மனஅழுத்தம் உடைத்தெறிதல்     வாழ்வில் மனதை உறைய வைக்கும் ஏமாற்றங்கள், வடுவாக்கும் பிரிவுகள், அனுக்‌ஷனமும் நினைவூட்டும் இழப்புகள், தாங்கொணாத துயரங்கள், மன்னிக்க இயலா துரோகங்கள், காரணமின்றி ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளால், மனம் சோகங்களினால் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தினால் வெளிப்படும் பாதிப்பே, தீவிர மனஅழுத்தம் எனப்படுகிறது. தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் அழுத்தம், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.  இவைகள் உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.  இதனால், உடலில் நோய் எதிர்ப்புத்திறனையும்   குறைத்து விடக்கூடும். அதிக கவலைகள், தினசரி ஏற்படுகின்ற வேலைப்பளு, முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் விடயங்கள்,புறச்சூழல் போன்றவை, தற்காலிக மனஅழுத்தத்தை,  தினம் தினம் ஏற்படுத்தக் கூடும்.      ஏற்படும் மனஅழுத்தத்தால் பதட்டம், பரபரப்பு, பயம், எதிர்மறை எண்ணங்கள், தன்னுணர்வற்ற நிலை, எதிலும் நாட்டமின்மை,தெளிவற்ற மனம், கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற செயல்களை ஏற்படுத்தி, மனம் இயம்பு நிலையில் இருக்க முடியாமல் செய்து விடுவதோடு, தவறான கண்ணோட்டத்தோடு

வாழ்வியல் கலை - மனசாட்சி ஒரு பார்வை

மனசாட்சி ஒரு பார்வை                                                                       உருவமில்லா  ஒரு அச்சுறுத்தும் மாயக்குரல், நாம் வளர்ந்த சூழ்நிலை, மதம், இனம், காலம், கலாச்சாரம் இதை வைத்து,  எது சரி. எது தவறு என்று நமக்குள், ஒரு அட்டவணை பதிந்திருக்கும்.  இது, நபருக்கு நபர் மாறுபடும். இந்த  அட்டவணையில்,  சரி என்ற பக்கத்தில் உள்ளவற்றை நீங்கள் செய்தால், இந்த உருவமில்லாக் குரல் - உங்களைப் பாராட்டும்.  “சபாஷ் பா”.  அதே அட்டவணையில் உள்ள,  தவறு என்ற பக்கத்தில்  இருக்கும் செயல்களை, நீங்கள் செய்தால், இந்த உருவமில்லா மாயக்குரல் - உங்களை எச்சரிக்கும்.  `ஏய்’,  நீ,  ரொம்ப ஓவரா போறே”,   இது தப்பு,  இதை,  திரும்ப செய்யாதே” என்ற இந்த உருவமில்லா ஒரு மாயக்குரலே, மனசாட்சி என்று சொல்லப்படுகிறது.          ஏன் மனசாட்சி பற்றி யோசிக்கணும்?  என்ற கேள்வியின் பதிலாக,  மனசாட்சி – சரி,  தவறு  என,   நமது செயல்களை வகைப்படுத்தினால், தவறு என்ற அட்டவணைப் பக்கத்தில் உள்ளவற்றை, நாம் செய்யும்போது, நமக்குக் குற்ற உணர்வை ஏற்படுத்தி விடும்.   அக்குற்ற உணர்வு, நமக்கு,  ஆரோக்கியக் குறைவை ஏற்படுத்தும்.  சிலர்,  தங்களி

மகாபாரத மொத்தக் கதாபாத்திரங்கள்

Image
அ 1) அர்ச்சுனன் 2) அதிரதன் 3) அத்திரி மகரிஷி 4) அபிமன்யு 5) அம்பா 6) அம்பிகா 7) அம்பாலிகா 8) அரவான் 9) அஸ்வத்தாமன் ஆ 10) ஆங்கிரச முனிவர் 11) ஆதிசேஷன் 12) ஆஸ்திகர் இ 13) இடும்பன் 14) இடும்பி 15) இலா உ 16) உக்கிரசேனன் 17) உக்கிரசிரவஸ் 18) உதங்கர் 19) உத்தரன் 20) உத்தரை 21) உப பாண்டவர்கள் 22) உலுப்பி 23) உலூகன் ஊ 24) ஊர்வசி ஏ 25) ஏகலைவன் க 26)) ககுத்மி 27) கங்கா 28) கசன் 29) கடோற்கஜன் 30) கண்ணன் 31) கம்சன் 32) கர்ணன் 33) காசிபர் 34)கா 35) காந்தாரி 36) கிண்டமாமுனிவர் 37) கிருதவர்மன் 38) கிருபர் 39) கிருபி 40) கீச்சகன் 41) குந்தி 42) கேசி 43) கௌரவர்கள் ச 44) சகாதேவன் 45) சகுந்தலை 46) சகுனி 47) சஞ்சயன் 48) சத்தியபாமா 49) சத்தியவதி 50) சந்தனு 51) சந்திரன் 52) சரத்வான் 53) சர்மிஷ்டை 54) சல்லியன் 55) சனகாதி முனிவர்கள் 56) சாத்தியகி 57) சால்மன் 58) சிகண்டி 59) சிசுபாலன்   60) சித்ராங்கதன் 61) சித்ராங்கதை 62) சுக்ராச்சாரியார் 63) சுக்தா 64) சுபத்திரை 65) சுபலன் 66) சுப்ரியா 67) சூரசேனன் 68) சோமதத்தன் த 69) தட்சன் 70) தத்தாத்ரேயர் 71) திருதராஷ்டிரன் 72) திருஷ்டதியுமணன் 73) தர்மன் 74) த