வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே
(வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று நினைப்பு வருபவர்களுக்காக)
வாழ்க்கை சில சமயங்களில் எல்லோரையுமே " என்னடா வாழ்க்கை இது" என்று எண்ணத் தோன்றும்.
அதிலிருந்து மீண்டு நமது இலட்சியப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும்.
இலட்சியங்கள் இருந்தால் அது நம்மை சாகவிடாது. இலட்சியத்தை அடைய நமது மனம் நம்மைத் துண்டிக்கொண்டே இருக்கும்.
இலக்கு இல்லாத பயணம் இப்படித்தான் துடுப்பு இல்லாத படகைப்போல் ஆடும், தத்தளிக்கும், மூழ்கடிக்கும்.
"வீட்டிற்கு வீடு வாசற்படி" என்பது போல கஷ்டங்களும் தோல்விகளும் அனைத்து மனிதர்களையும் தீண்டிச் செல்லும்.
இறப்பு தீர்வு ஆகாது. நம்மை ஈன்ரெடுத்த அன்னைக்காகவாவது நாம் வாழ்ந்து விட வேண்டும்.
நமது பிரிவு அவர்களை அதளபாதாளத்தில் தள்ளி அவர்கள் வாழ்க்கை முழுவதும் நரக வேதனையை சுமக்க வேண்டிவரும்.
மகிழ்ச்சியாக வாழ வழிகள்
- இலட்சியத்தை பொறுத்துங்கள்
- மகிழ்ச்சியான மனிதர்களோடு பிரயாணம் செய்யுங்கள்.
- நேர்மறை எண்ணங்கள் கொண்ட நண்பர்களின் அருகில் இருங்கள்.
- நாம்- நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள் ஆகியற்றை கற்றுக் கொள்ள வேண்டும் அதில் பிரயாணம் மகிழ்ச்சியை உண்டாக்கும்.
- சுய மதிப்பீட்டை அதிகப்படுத்துங்கள்
- மனநலம் சார்ந்த வகுப்புகளுக்கு சென்று வாருங்கள்.
- நீ எதை தேடுகிறாயோ அது உன்னைத் தேடுகிறது —- சுவாமி விவேகானந்தர் ( எனவே மகிழ்ச்சியை தேடுங்கள்)
- வாழ்க்கை வாழ்வதற்கே
Comments
Post a Comment