திருமண வாழ்க்கையில் இருபாலருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்
திருமண வாழ்க்கையில் இருவருக்கும் அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்
(எல்லோருக்கு இல்லை பலருக்கு)
ஆண்கள் பக்கம்
என்ன சம்பாதித்து கொடுத்தலும் மரியாதை இல்லாத வாழ்க்கை
உடன் பிறப்புகள் பெற்ற தாய் தந்தை அனைவரையும் மாற்றான் போல பார்க்கும் சூழ்நிலை உருவாதல்
உண்மையில் கல்யாணம் என்பது நமக்கு பெரிய கால் கட்டுதான் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறது
யாரோ என்னை வீடியோ கேமரா கொண்டு தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு
7 1/2 வருடந்தான் சனி பகவான் பிடிக்கும் காலம்…….
என் மொத்த வாழ்நாள் வருமானமும் உன்னுடையதாகிறது. இதில் நான் கேட்ட 20 பவுண் மட்டும் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. எங்கு போய் நியாயம் கேட்க……….
தேவை என்ற போது தான் பூஜை விரதம் 3 நாள் என்கிறாள். இதில் பாதி நாள் கழித்து விடுகிறது………
மாதவிடாய் நிறுத்தம் அவளுக்கு அடங்கிவிட்டது. எனக்கு இல்லையே என்ன செய்வது……… அப்போது விரும்பியவள் இப்போது இந்த வயசுல அலையாதிங்க என்று சொல்வதை கேட்க வேண்டியிருக்கு…..…
Etc
பெண்கள் பக்கம்
சமையலறை சுவர்கள் கூட சொல்லுது நீ நல்லா சமைக்கிறாய் என்று….. ஆனால் இந்த மனிஷன் பொன் வாயில் வரலையே…..
திரிஷாவை அழகு என்கிறான். அவளா வந்து தலை வலிக்கு தைலம் தேய்க்கப் போகிறாள்…….
பகலில் பகையாகிறேன் இரவில் ரதியாகிறேன். என் பகல் பொழுது எப்போது அழகாகும்!!!………
எல்லாம் ஞாபகம் இருக்கும் என் பிறந்த நாள் தவிர……
என் அம்மா வீட்டுக்கு போக கேட்டால் அப்போது தான் ஆபிசில் Inspection வருவாங்க, லீவு போட முடியாது……..
என் தங்கை மீது ஒரு கண் தவறாக விழுகிறதே…….
உன் அம்மா அப்பா எனக்கு அம்மா அப்பா போல என்று நான் நினைத்து சேவை செய்யனும். என் அம்மா அப்பாக்கு ஒன்னுனா என் அண்ணன் தம்பி பாத்துகனும்………தீராத ஆண் பெண் வேறுபாடு
எனக்கு வேண்டாம் என்றாலும் உனக்காக நான் ஒத்துழைப்பு தரனும்……
Etc
Comments
Post a Comment