கணவன் செய்யக்கூடாதவைகள்
கணவன் செய்யவே கூடாதவைகள்
( செய்தால் பெண்கள் பேய் ஆட்டம் ஆடிவிடுவார்கள்)
தாம்பத்ய வாழ்க்கையில் இருவரும் இணைந்து வாழ்ந்துவரும் சூழலில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அச்சாணிகள்.
பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் ( Feeling oriented)
ஆண்கள் முடிவுகள் ரீதியாக சிந்திப்பவர்கள் ( Solution oriented)
எனவே பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பதால அவர்களிடம் நடந்து கொள்ள கூடாதவைகள் அப்படி கணவன் நடந்து கொண்டால் மனைவி இராட்சசி போல் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
1) சுவாரஸ்யமற்ற வாழ்க்கை சூழலில் குடும்பத்தை வைத்திருந்தால் ...........
2) மனைவியில் நல்ல விஷயங்களை பாராட்டாமல் கெட்ட விஷயங்களை மட்டும் பெரிது படுத்தி குறை கூறிக் கொண்டே இருந்தால்............
3) மனைவியை குடும்பத்தில் தனக்கு சமமாக நடத்தாமல் அடிமையாக நடத்தினால்.............
4) மனைவியை சமாதானம் செய்ய தெரியாவிட்டால்............
5) மனைவியை மன்னிக்கும் தன்மை இல்லாவிட்டால் .........
அவமரியாதையாக நடத்தினால்..........
6) கணவன் மன நோயாளியாக இருந்தால்.......
7) மனைவியை குடும்பம் சார்ந்த முடிவுகளின் போது கலந்தாலோசிக்காவிட்டால்.......
8) மன அழுத்தம் கொடுக்கும் இடமாக வீடு ( கணவன்) இருந்தால்......
மற்றும் அலுவலக மன அழுத்தத்தை கொண்டு வந்து மனைவியிடம் கொட்டினால்............
9) மனைவியை இழிவாக நடத்தினால்........
10) எப்போது மனைவியிடம் வாக்குவாதம் செய்தால்........, மனதை காயப்படுத்திக் கொண்டே இருந்தால்........... இயலாமையை சுட்டி காட்டிக் கொண்டே இருத்தால்.........
11) மனைவியை பற்றி யாரிடமாவது குறை கூறினால்...............
12) அதிகப்படியான போதை பழக்கத்தில் தொடர்ந்து இருந்தால்..........
13) மனக் கசப்பை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டே இருந்தால்.............
14) மனைவியை காதலிக்காவிட்டால்......
15) மனைவிக்கு முன்னுரிமை கொடுக்காவிட்டால்...........
(தாய்க்கு சகோதரி முன்னுரிமை கொடுத்தால்.......)
16) மனைவியின் நண்பர்களை ( ஆண் , பெண்) மதிக்காவிட்டால்............
17) மனைவியை பழக்க வழக்கங்களை தொடர்ந்து மாற்ற முயற்சி செய்து கொண்டே இருந்தால்.............
18) பாராட்டி பேசாமல் போனால்........ ( உணர்ச்சி ரீதியாக நெருக்கமாக இல்லாது போனால்.....)
19) தாம்பத்யம் சரியாக அமையாவிட்டால்....... வலியான தாம்பத்யம் அமைந்தால்...........
காதல் கொள்ளாவிட்டால்.......
20) குழந்தைகளின் எதிர்காலம் பற்றி கவலைப்படாமல் இருந்தால்.......
21) மனைவிக்கு ஆதரவாக பேசவில்லை என்றால்............
22) வீட்டு வேலைகளில் உதவாவிட்டால்.............
23) மனைவியின் தாய் அல்லது தந்தை அல்லது சகோதரி அல்லது சகோதரன் ஆகியவர்களை அவமான படுத்தினால்......................
தவறாக விமர்சித்தால்...................
24) மனைவிக்கு முன் மற்ற பெண்களின் அழகை புகழந்து கொண்டே இருந்தால்.........
25) மனைவியை விமர்சித்துகொண்டே இருந்தால்............
மனைவியின் திறமையை பாராட்டாமல்..........
26) மனைவியை சமாதானம் செய்ய தெரியாவிட்டால்.............
27) மனைவியின் இலட்சியத்தை அலட்சியம் செய்தால்...........
மனைவியை சுதந்திர இல்லாமல் அடிமையாக நடத்தினால்..............
28) வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்தால்...........
29) மனைவி அதிக நேரம் மற்ற பெண்களோடு அல்லது சொந்தகாரர்களோடு பேசி பேசி மகிழ்வதை தடுத்தால்.........
30)மனைவியின் கடந்த கால தவறுகளை சுட்டிக் காட்டிக் கொண்டே இருந்தால்........
31) தன் உணர்வுகளையும் , தன் தேவைகளையும், தன் வலிகளையும் மனைவி சொல்லும் போது காது கொடுத்து கேட்காவிட்டால்............
32)நன்றியுணர்வு இன்றி இருந்தால்.......
(தந்திரா போதிபிரவேஷ் அவர்களின் வீடியோவில் இருந்து எடுக்கப்பட்டது)
Comments
Post a Comment