டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
1) பிறப்பு
July 30. 1886
திருக்கோகர்ணம்
புதுக்கோட்டை மாவட்டம்
2 ) தந்தை தாய்
நாராயணசாமி - வழக்கறிஞர்( பிராமண சமூகம் சந்திராம்மாள் -- பாடகர் (வேளாளர் சமூகம்)
3) கணவர்
சுந்தர் ரெட்டி
(அடையாற்றில் உள்ள அன்னிபெசன்ட் அம்மையார் நிறுவிய பஇரம்பஞஆன சபையில் மூட நம்பிக்கைகள் மற்றும் அர்த்தமற்ற சடங்குகளை தவிர்த்து திருமணங்கள் நடத்தி வந்தவர் சுந்தர் ரெட்டி .
அங்கு தான் முத்துலட்சுமி - சுந்தரரெட்டி திருமணம் ஏப்ரல் 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது)
4) மகன்கள்
*. இராம் மோகன் - திட்டக்குழு இயக்குநராக இருந்தார்
* கிருஷ்ணமூர்த்தி - மருத்துவர் , அடையார் புற்றுநோய் மருத்துவமனை நிர்வாகி
5) உடன் பிறந்தவர்கள்
தங்கைகள் -- சுந்தராம்பாள் , நல்லமுத்து
தம்பி -- இராமையா
6) சாதனைகள்
* இந்தியாவின் முதல் பெண் மருத்துவர்
(வெளியூர் கல்லூரிகளில் பெண்களுக்கு தங்கும் விடுதி இல்லை. உள்ளூர் கல்லூரிகளில் பெண்களைச் சேர்ப்பதில்லை என்ற கட்டுப்பாடு இருந்தது.
சில பழைமைவாதிகள் பெண்கள் கல்லூரியில் பயில்வது கடுமையாக எதிர்த்தனர். ஆனால், பெண் கல்வியில் பெரும் ஆர்வமும், முற்போக்கு சிந்தனையும் கொண்ட அப்போதைய மன்னர் மார்த்தாண்ட பைரவத் தொண்டைமான் எதிர்ப்புகளை மீறி முத்துலட்சுமிக்கு கல்லூரியில் பயில அனுமதி அளித்தார்.)
* 1912 ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்றவர்.
* நாட்டின் முதல் பெண் மருத்துவர் என்ற பெருமை பெற்றவர்
* ஆண்கள் கல்லூரியில் முதல் பெண் மருத்துவர்
* நிதி திரட்டி அடையாறு புற்றுநோய் மருத்துவமனை நிறுவினார். அக்டோபர் 1952 ல் பிரதமர் நேரு இந்த மருத்துவமனையை திறந்து வைத்தார்.
இந்தியாவின் இரண்டாவது பெரிய புற்றுநோய் மருத்துவமனை இதுவாகும்
* சமூக போராளி
* பெண் உரிமை தன்னார்வலர்
* எழுத்தாளர்
* இந்திமொழிக் கிளர்ச்சியில் பங்குபெற்றார்.
* தமிழ் வளர்ச்சிக்கு அரசும் பணியாற்றினார்
* மாதர் இந்திய சங்கம் நடத்திய பெண்களுக்கான 'ஸ்திரீ தருமம்' என்னும் மாத இதழின் ஆசிரியராக இருந்தார்.
7) விருதுகள்
இவரின் சேவைகளுக்காக மத்திய அரசு 1956ல் பத்ம பூசண் விருது வழங்கி கௌரவித்தது.
8) இறப்பு
July 22. 1968
Comments
Post a Comment