மகாபாரத கதாபாத்திரங்கள் (111)-சந்திரன்

சந்திரன்/சந்திரதேவன்
(நவகிரகங்களில் ஒருவர்)
(பிரம்மாவின் அம்சமாகவும் கருதப்படுகிறது)

1)பட்டப்பெயர்கள் 

சோமன் 
சந்திரதேவன்

2)தந்தை தாய்

அத்திரி முனிவர்(பிரஜாபதி)-அனுசுயா தேவி
(பாற்கடலை கடையும் போது பிறந்ததாகவும் கருதப்படுகிறது)

3)மனைவிகள்

27 நட்சத்திரங்கள்

4)மகன்கள்

பரிவேடன்

5)மாமனார்

தட்சன்(பிரஜாபதி)- பிரசூதி
(சுவயம்புமனு- சத்ருபை தம்பதிகளின் மகள்)

6)தட்சனின் சாபம்

தட்சனின் மகள்களான 27 நட்சத்திரங்களையும் சந்திரன் மணந்து கொண்டார். ஆனால் ரோகிணியுடன் மட்டும் அதிக காலங்கள் கழித்ததால் மற்ற மனைவியர்கள் தனது தந்தையான தட்சனிடம் புகார் செய்தனர். அதனால தட்சன் தனது மகள்களை சமமாக நடத்தாத சந்திரனின் அழகு நாளோன்றுக்கு அழிந்து மறைந்து போகட்டும் என சாபமிட்டார்.
சிவனை வேண்டி சாபவிமோசனம் அடைந்தார்
அதுவே சந்திரன் தேய்ந்து அமாவாசையாகும் மீண்டும் வளர்ந்து பௌர்ணமி ஆகும் கருதப்படுகிறது.


Comments