Posts

Showing posts from September, 2024

நெல்லிக்காய் டீ

நெல்லிக்காய் டீ  நெல்லிக்காய்   உடலுக்கு மிகவும் சிறந்த உணவு அதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்மைகள்   அல்சரை குணமாக்குகிறது,  எடை குறைய உதவுகிறது மலச்சிக்கலை சரி செய்கிறது,  ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, பார்வையை மேம்படுத்துகிறது,  ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,  நீரிழிவை தடுக்கிறது,  கல்லீரலுக்கு நல்லது, இதயத் தசைகளை வலிமையாக்குகிறது, முடி பிரச்சினைகளை சரி செய்கிறது, ஞாப சக்தியை வலுவாக்குகிறது, கெட்ட கொழுப்பை குறைக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது, பொலிவான முகத் தோற்றம், வயது முதிர் தோற்றத்தினை குறைக்கிறது,  சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.  இன்னும் ஏராளமான பலன்கள் உண்டாகும். தினசரி Fresh நெல்லிக்காயை பயன்படுத்தலாம் அல்லது நெல்லி சாற்றினை Ice cube ஆக தயார் செய்து Freezer ல் வைத்து டீ போடும்போது பயன் படுத்தலாம்  நெல்லிக்காய் டீ செய்முறை   நெல்லிக்காய் ஜூஸ் சிறிதளவு  இஞ்சி சிறிதளவு  10 புதினா இலைகள்  5 செம்பருத்தி பூக்கள்  ஆகியவற்றை கொதிக்கவைத்து வடிகட்டி  எலுமிச்சை சாறு மற்றும் ...

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள்  இந்த புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்  கர்ப்பத்தினாலும், பிள்ளைகளை பெறுவதனாலும், பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும் மற்றும் பிள்ளைகளை அதிகமாக பெறுவதனால் ஆண் பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் பெண்கள் நலத்துக்கு ஆண்களால், ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும்  நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்ததே எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் பெரியார்  தலைப்புகள்   1) கற்பு 2) கற்பும் வள்ளுவரும்   3) காதல் 4)கல்யாண விடுதலை  5) மறுமணம் தவறல்ல  6) விபச்சாரம்  7) விதவைகள் நிலைமை  8 ) சொத்துரிமை  9)கர்ப்பத்தடை 10) பெண்கள் விடுதலைக்கு " ஆண்மை"  அழிய வேண்டும் . மேலும் விவரங்களுக்கு  புத்த...

பெண் ஏன் அடிமையானாள் தலைப்பு 3 - காதல் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 3 - காதல ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  காதல்   காதல் என்றால் என்ன?  அதற்கு சக்தி என்ன?  அது எப்படி உண்டாகிறது?  அது எதுவரையில் இருக்கின்றது?  அது எந்தெந்த சமயங்களில் உண்டாகிறது?  அது எவ்வபோது மறைகின்றது ? அப்படி மறைந்து போய்விடுவதற்கான காரணம் என்ன? என்பதைப் போன்ற விஷயங்களை கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை பிரதானப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கிவிடும் என்கிறார் பெரியார். காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும் . அப்படி வேறு ஒருவரிடம் ஏற்பட்டால் அது காதலாக இருக்க முடியாது அது விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும்  ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமும் விரசமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது. இந்த காதல் காரணத்தா...

ஆரோக்கியமான உணவுகள் (7)

ஆரோக்கியமான உணவுகளின் சமையல் குறிப்புகள்  உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உணவுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன . எனவே நாம் நல்ல உணவுகளை வீட்டில் தயார் செய்து தினமும் சாப்பிடும் பழக்கத்தினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உதாரணமாக இங்கு சில உணவுகள் கொடுக்கப்பட்டுள்ளன பசித்த பின் புசி -  இதவே உடல் ஆரோக்கியத்திற்கான தாரக மந்திர பொன்மொழி ஆகும். இதனை சரியாக பயன்படுத்தினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். பசி வந்த பிறகு சாப்பிடுவதும், தாகம் எடுத்த பிறகு நன்கு தண்ணீர் அருந்துவதும் மேலும் உடல் மொழிகளை கவனித்து நடப்பதும்,  மனதை எப்போதும் ஆரோக்கியமாக வைப்பதும்  உடல் ஆரோக்கியத்திற்கான படிகளாகும். உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு மனமும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் . மனதில் நேர்மறை சிந்தனைகள் நிறைந்து இருக்க வேண்டும்.   மனமும் உடலும் இரட்டைப் பிறவிகள் ஒன்றில்லாமல் மற்றொன்று சுகப்படாது.  உடல் ஆரோக்கியம் குறைந்தால் மன மகிழ்ச்சி பாதிக்கப்படும் மன மகிழ்ச்சியை பாதிக்கப்பட்டால் உடல் ஆரோக்கியம் கெடும்.  எனவே மனதையும் உடலையும் எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்   உணவ...

செம்பருத்தி பூ டீ

செம்பருத்தி பூ டீ செம்பருத்தி பூக்கள் உடலுக்கு தேவையான அபார சத்துக்கள் நிறைந்தது.  செம்பருத்தி பூக்களை டீயாகவும்,  செம்பருத்தி ஜூஸ் ஆகவும் செம்பருத்திப் பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் பயன்படுத்தலாம். செம்பருத்தி பூவின் நன்மைகள்  1)தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தல் நரைத்தால் போன்றவற்றை தடுக்கிறது 2) ரத்த அழுத்தத்தை குறைக்கிறது  3)பல காயங்கள் விரைவில் ஆறுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மருந்தாக உபயோகப்படுகிறது 4) கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது இதனால் தமனிகளில் உள்ளே உள்ள அடைப்புகள் நீங்கி கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது 5) விட்டமின் சி  , இரும்புச்சத்து உள்ளது  6)ஜலதோஷம் இருமலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது  7)குறைந்த ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்களுக்கு அதனை சரி செய்கிறது  8)ஆன்ட்டி ஆக்சிடென்ட் (அந்தோ சயனைடுகள், ஃப்லாவனாய்டுகள், பிளானிக் அமிலம் ஆகிய ஆர என்ற அடடி ஆக்சிடென்ட்கள்) நிறைந்து உள்ளதால் தொற்றுக்களையும் கிருமிகளையும் எதிர்த்து போராடுகிறது  9)வயது மூப்பை தள்ளிப் போடுகிறது  10)இதய நோய் , புற்றுநோய் போன ஆபத்தான நோய்...

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும்  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  2) வள்ளுவரும் கற்பும்   தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை. " தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்" வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார். எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம். அவ்வையாரின்   "தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது) "பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்)   வள்ளுவரின்   "பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது) பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீ...

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 1 -கற்பு - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 1 - கற்பு  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  1) கற்பு கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம் சத்தியம் ஒப்பந்தத்திற்கு விரோத மில்லாமல்......... ஆங்கிலத்தில் Virginity என்றால் பரிசுத்தம் ........ ஆரிய பாஷையில் கற்பு என்றால் அடிமை ....... திருக்குறளில் தன் தலைவனை தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும்....... திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை எழுதி இருப்பாரா!!!!!!...... என்பதை கவனிக்கும்படி வேண்டுகிறேன் என்கிறார் பெரியார். ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைக்கப்பட்டுக் கிடைப்பதற்கான காரணம் ஆண்களின் ஆதிக்கமே........ உண்மையில் பெண்கள் விடுதலை வேண்டுமென்றால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து , இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்.   கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்...

சக மனிதர்களுடன் சுமூக உறவு ( People skill))

சக மனிதர்களுடன் சுமூக உறவு     (People Skill) நமக்கு சக மனிதர்களுடன் நல்ல நட்போ அல்லது உறவோ ஏற்பட வேண்டும் என்றால் கீழே உள்ள உத்திகளை சரியாக கையாள வேண்டும். அன்பு இருந்தால் கோபம் வராது. அனைவரின் மீதும் அன்பு செலுத்த பழக வேண்டும். தவறுகள் நிகழும் போது எதிரே இருப்பவரை குறை கூறுவதை தவிர்த்து அதில் உள்ள நோக்கத்தினை (Intention) பார்க்கவும்  1 ) உடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல  செயல்களுக்கு பாராட்டுதல் (Appreciation) 2) எதற்கும் குறை கூறாமல் இருத்தல் (Complaning)   3) நன்றி கூறுதல் ( Gratitude) 4) மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தவறாக விமர்சனம் செய்யாதிருத்தல் (Wrong Reviews) 5) தண்டனைகளும் கண்டிப்புகளும் சண்டைகளும் சுமூக உறவை கெடுக்கும்  6) அவர்களின் வரம்பிற்குள் நுழையாமல் இருத்தல்  7) தேவையற்ற அறிவுரை மற்றும் ஆளோசனை வழங்காமல் இருத்தல் ( No Advices) 8) தவறுகளை குத்திக் காட்டாமல் இருத்தல்  9) மற்றவர்கள் மீது எதிர்மறைப் பேச்சு பேசாமல் இருத்தல்  10) முடிந்த உதவிகளை எதிர்பார்பின்றி செய்தல்.  11) மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வே...

குழந்தை வளர்ப்பு -(6)

Image
குழந்தை வளர்ப்பு  குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலை இதனை தம்பதிகள் கற்றுக் கொள்ள வேண்டும். ( அறிமுகம் ) குழந்தைகளுக்கான பழக்கங்களை  பெற்றோர்களால் மட்டுமே சொல்லிக் கொடுக்கப்படுவதில்லை.  குழந்தைகளுக்கான அனுபவங்கள், இயல்புகள், வாழ்வியல் முறைகள், பின்பற்றப்படும் சம்பிரதாயங்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் , சமூகம் , நண்பர்கள் , ஆசிரியர்கள் , வாழும் சூழ்நிலை,  வாழும் மதம் , வாழும் இடம், சுற்றி வாழும் நபர்கள் ஆகிய அனைத்தும் சொல்லித் தரும். இதில் பெற்றோர்களின் பங்கு பிரதானமானது. 1) சுய மதிப்பு உருவாக்குதல்   2) சுய விழிப்புணர்வு கொள்ளச் செய்தல் 3) நேர்மறை சிந்தனை, எண்ணங்கள் வளர்த்தல்   4 ) சுய பேச்சு ( Self talk ) 5) சகமனித நேயம்  6) மன்னித்தல் குணம்   7) தனித் தன்மை ( Individualty) 8) முடிவெடுக்கும் திறன் ( Decision making) 9) நல்லவலனோடு சேர்த்த வல்லவன் 10) குறிக்கோளில் தெளிவு 11)  நியாயம் தர்மம் கோட்பாடுகள்  12) சொல்வளம்  13) மனப் பக்குவம் ( maturity ) 14)  சுறுசுறுப்பு  15) உதவும் மனப்பான்மை  16) வளர்ந்த குழந்தைகள...

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள். 1) ஒப்பிடுதல்  2) இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையை கவனிப்பு குறைதல்  3) பதின்பருவ தவறுதளை வெட்ட வெளிச்சமாக்கிவிடுதல் 4) நுண் மேலாண்மை (Miro management)  5) மதிப்பெண் வைத்து மதிப்பிடுதல் 6) உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை 7) முடிவெடுக்க விடாமல் செய்தல்  8) தனித் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமை 9) மோசமான எதிர்மறை வார்த்தைகள் பிரயோகம்  10) குழந்தைகளின் விருப்பங்கள் கனவுகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமை  11) குழந்தை வளர்ப்பு குறித்த போதிய அறிவின்மை  12) குழந்தைகள் முன்பு தம்பதியர் ஒருவரை ஒருவர் அவமதித்துக் கொள்ளுதல்  13) மனம் சார்ந்த கெட்ட பழக்கங்களை சொல்லித்தராமல் இருத்தல்   14) கெட்டதை ஈர்க்கும் உணர்வுகளில் உழல செய்து விடுதல்