Posts

Showing posts from October, 2023

தாம்பத்யம்

தாம்பத்யம் மனைவி என்பவள் கணவனுக்கும் / கணவன் என்பவன் மனைவிக்கும் வாழ்க்கை என்ற வண்டியில் அச்சாணிகள். அச்சாணி இல்லாத வண்டி தடம் புரளும் எனவே மனைவி கணவன் தாம்பத்ய உறவு சுமூகமாக இருக்க வேண்டும் தாம்பத்யம் என்பது நமது முன்னோர்கள் புனிதமாகக் தான் பார்த்தார்கள். கோயில்கள் உள்ள சிற்பங்கள் இதை சித்தரிக்கிறது தாம்பத்யம் சார்ந்த நூல்கள் அக்கால கட்டங்களில் மிக அதிகமாக வெளிவந்துள்ளது. இப்போது தான் அது தவறாக சித்தரிக்கப்படுவதால் அது சார்ந்த அறிவை தேடுவதிலும் கற்பதிலும் தயக்கம் ஏற்படுகிறது. மனைவியை கணவனும்/ கணவனை மனைவியும் முழு திருப்தி அடையச் செய்ய வேண்டும். இல்லை எனில் அது குடும்பத்தில் மறைமுக சிக்கல்களை ஏற்படுத்தும். உள்ளே இருக்கும் தாம்பத்யம் சார்ந்த பிரச்சினைகள் தெரியயாமலேயே மறைந்து போகும். இதனால் பிரிவு போன்ற பிளவுகள் கூட ஏற்படும். மேலும் தாம்பத்யம் சரி இல்லாத குடும்பங்களில் மன உறுதி குறைந்த இடங்களில் வேறு நபர் நுழையும் ஆபத்தும் உள்ளது. ( Etra marital affairs) தாம்பத்யம் சார்ந்த அறிவை ஆண்கள் தான் வளர்த்துக் கொண்டு மனைவிக்கு கொஞ்சம் கொஞ்சமாக சொல்லித் தர வேண்டும். அதைவிடுத்து அவர்களுக்கு வலி வெற

குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3)

குடும்பம் சார்ந்த தலைப்புகள் 1) சிறந்த செல்வம் எது 2) பணத்தால் வாங்க முடியாதது எது 3) இந்த உலகில் வாழத் தகுதிகள்   4) குழந்தை வளர்ப்பு   5) ஆண் பெண் உளவியல்   6) வளரந்த குழந்தைகள் மீது அளவான அக்கறை   7) பதின் பருவத்தில் ஏற்படும் காதல்   8) மகிழ்ச்சியான உணர்வு   9) நச்சு மனிதர்களை சமாளிப்பது எப்படி   10) பெண்கள் மன வலிமை பெற வழிகள்   11) எதிரிகளை உருவாக்கக் கூடாது   12) வாழ்க்கை வாழ்வதற்கே   13) அறிவு, மனம்   14) அன்பு, பாசம், காதல் வேறுபாடு   15) தாம்பத்யம்   16) காதல் உணர்வு   17) கணவன் செய்யக் கூடாதவைகள் ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5)

மனம் சார்ந்த தலைப்புகள் (1)

மனம் சார்ந்த தலைப்புகள் 1) அன்பு, பாசம், காதல் வேறுபாடு   2) குறைவாக பேச உத்திகள் 3) புத்தி, மனம் 4) சுய விழிப்புணர்வு ( Self Awareness ) 5) சுய மதிப்பீடு ( Self Esteem ) 6) உணர்வுகள் 7) உணர்வுகள், உணர்ச்சிகள் வேறுபாடு 8) எண்ணங்கள் 9) மன உளைச்சலுக்கான காரணங்கள் 10) மகிழ்ச்சியான உணர்வு 11) சிந்தனை ஒழுக்கம் 12) உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் 13) கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்   ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5)

அன்பு, பாசம், காதல் வேறுபாடு

அன்பு, பாசம், காதல் வேறுபாடு (ஆங்கிலத்தில் Love) தமிழில் இதற்கு 3 வார்த்தைகள் உள்ளது. அன்பின் வடிவங்கள் நேசம் பாசம் காதல் கருணை இரக்கம் ஈரம் அன்பு எதிர்பார்ப்பு இன்றி நேசம் வருவது எல்லா மனிதர்கள் மீதும் வரலாம் எல்லா உயிர்கள் மீதும் வைக்கப்படுவது உதாரணம் எல்லா உயிர்களும் நலம் பெற எண்ணம்,  எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவுவது எந்த எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை காட்டுவது பாசம்   நெருங்கிய உறவுகள் மீது நேசம் வைப்பது இரத்த உறவுகள் மீது வைப்பது உயிர் தோழமை மேல் வைப்பது  உதாரணம்  தாய் , தந்தை அவர்களின் மகள் மீதும் மகன் மீதும வைக்கும் நேசம். குழந்தைகள் அவர்களின் தாய் தந்தை மீது வைப்பது. இப்படி பட்ட உறவுகள் என்ன செய்தாலும் மன்னித்துவிட தோன்றும் காதல் என்னுடைய என்ற  உடைமையாக கருதும் உறவின் மீது வரும் நேசம் . உதாரணம்  ஆண் பெண் உடல் மற்றும் மன ரீதியான ஈர்ப்பால் வைக்கும் நேசம் தான் காதல்  ஒருவருக்கு ஒருவர் தன்னுடைய உரிமைப் பொருளாக நினைப்பது உதாரணம்   ஒரு பெண் தன் தாய் மீது வைப்பது பாசம் தன் மாமியார் மீது வைப்பது அன்பு . ஒரு பெண் தன் மகள் மீது வைப்பது பாசம் , மருமகள் மீது வைப்பது அன்பு . கணவன் அல்லது

குறைவாக பேச உத்திகள்

குறைவாக பேச உத்திகள் குறைவாக பேச பயிற்சி செய்ய சில வழிகள் தியானம் செய்யுங்கள் மூச்சை கவனித்து மூச்சு பயிற்சி செய்யுங்கள் மாதம் இருமுறை மௌன விரதம் இருங்கள் ( இவ்விரதத்தின் போது வேலை ஏதும் செய்யாமல் ஒரே இடத்தில் அமர்ந்து இருத்தல் நல்ல பலன் தரும்) மனம் தொடர்பான வகுப்புகளுக்கு சென்று வாருங்கள் என் இலட்சியம் நிறைவேற அல்லது நான் பணக்காரன் ஆக இந்த பேச்சு உதவுமா என்று பேசும் முன் உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள். உதவாது என்ற பதில் வந்தால் பேசுவதை சுய விழிப்புணர்வோடு நிறுத்தி விடுங்கள் உணர்வை உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள. இவைகளை கடைபிடித்தால் காலப் போக்கில் நீங்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசுவது குறைந்துவிடும்.

புத்தி, மனம்

புத்தி , மனம்  புத்தி சார்ந்த முடிவுகள் என்பது நல்லது கெட்டது பற்றி யோசித்து முடிவெடுக்கக்கூடியது மனம் சார்ந்த முடிவுகள் என்பது பிடித்தது பிடிக்காதது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியது  உதாரணம் 1 அதி காலையில் எழுவது நல்லது என்று புத்தி சொல்லும். அதி காலை தூக்கம் என்பது மனதிற்கு பிடித்து எழ விடாது. உதாரணம் 2 நல்லது கெட்டது யோசிப்பதே புத்தியின் வேலை. அத்தனைக்கும் ஆசைப்படுவதே மனதின் வேலை  உதாரணம் 3 வீட்டு சாப்பாடு நல்லது என்று புத்தி சொல்லும் ஹோட்டல் சாப்பாடு order பண்ண மனம் ஆசைப்படும் உதாரணம் 4   இந்த காதல் சரிவராது என புத்தி சொல்லும் எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று மனம் காதலில் இறங்கும் இது போன்று தான் நாம் எது சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். ஜெயிப்பது ஆசையா! மன உறுதியா! என்பதில் தான் நம் எதிர்கால பயணம் தீர்மானமாகும். சில நேரங்களில் புத்தி சொல்வதையும் சில நேரங்களில் மனம் சொல்வதையும் கேட்கலாம் சூழ்நிலையை பொருத்தது. புத்தியும் மனமும் இணைந்து ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டால் அதுவே சிறந்த முடிவாக அமையும்.

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி

ஈர்ப்பு விதியை பயன்படுத்தி உயர் இலக்குகளை அடையவதும் செல்வந்தர் ஆவதும் எப்படி நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ, அதுவாக ஆவாய்  நீ எதை தேடுகிறாயோ அது உன்னைத் தேடுகிறது - சுவாமி விவேகானந்தர் நாம் எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ  அதை அதிகரிக்கச் செய்வதே ஈர்ப்பு விதி தத்துவம் ஈர்ப்பு விதியை பயன்படுத்தி நமது இலட்சியங்களை அடையலாம் செல்வந்தர் ஆகலாம்  1) எப்போதும் நல்லதை ஈர்க்கும் உணர்ச்சியில் அதிக நேரம் இருக்க வேண்டும் 2) கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பிரயாணிக்கக் கூடாது. 3) இலட்சியம் தெளிவாக இருக்க வேண்டும். 4) சுயமதிப்பு ( Srf Estee) நன்றாக வைக்க வேண்டும் 5) சுய விழிப்புணர்வு ( Self Awareness )வேண்டும் 6) இலட்சியத்தை அடைந்த பிறகான நாளை தினமும்  கற்பனை செய்ய வேண்டும் ( visualisation ) 7) நேர்மறை எண்ணங்கள் , நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை வார்த்தைகள் (Positive ) ஆகியவற்றுடன் பயணிக்க வேண்டும். 8) யாரையும் சபிப்பதோ பொறாமை படுவதே கூடாது. 9)ஒத்த எண்ணங்கள் கொண்டவர்களோடு பிரயாணிக்க வேண்டும். 10) மனம் எப்போதும் மகிழ்ச்சியான உணர்வில் இருக்க வேண்டும்  11)

வாழ்க்கை வாழ்வதற்கே

வாழ்க்கை வாழ்வதற்கே (வாழ்க்கையை முடித்துக் கொள்ளலாமா என்று நினைப்பு வருபவர்களுக்காக) வாழ்க்கை சில சமயங்களில் எல்லோரையுமே " என்னடா வாழ்க்கை இது" என்று எண்ணத் தோன்றும். அதிலிருந்து மீண்டு நமது இலட்சியப் பாதையில் கவனம் செலுத்த வேண்டும். இலட்சியங்கள் இருந்தால் அது நம்மை சாகவிடாது. இலட்சியத்தை அடைய நமது மனம் நம்மைத் துண்டிக்கொண்டே இருக்கும். இலக்கு இல்லாத பயணம் இப்படித்தான் துடுப்பு இல்லாத படகைப்போல் ஆடும், தத்தளிக்கும், மூழ்கடிக்கும். "வீட்டிற்கு வீடு வாசற்படி" என்பது போல கஷ்டங்களும் தோல்விகளும் அனைத்து மனிதர்களையும் தீண்டிச் செல்லும். இறப்பு தீர்வு ஆகாது. நம்மை ஈன்ரெடுத்த அன்னைக்காகவாவது நாம் வாழ்ந்து விட வேண்டும். நமது பிரிவு அவர்களை அதளபாதாளத்தில் தள்ளி அவர்கள் வாழ்க்கை முழுவதும் நரக வேதனையை சுமக்க வேண்டிவரும். மகிழ்ச்சியாக வாழ வழிகள் இலட்சியத்தை பொறுத்துங்கள் மகிழ்ச்சியான மனிதர்களோடு பிரயாணம் செய்யுங்கள். நேர்மறை எண்ணங்கள் கொண்ட நண்பர்களின் அருகில் இருங்கள். நாம்- நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள் ஆகியற்றை கற்றுக் கொள்ள வேண்டும் அதில் பிரயாணம் மக

சிறந்த செல்வம்

சிறந்த செல்வம்   ஒரு மனிதனுக்கான சிறந்த செல்வம் என்பது அவனிடம் உள்ள நேர்மறை சிந்தனைகள் நேர்மறை உணர்ச்சிகள் நேர்மறை வார்த்தைகள் சுய விழிப்புணர்வு சுய மதிப்பீடு சுய ஒழுக்கம் தைரியமும் தன்னம்பிக்கையும் இவைகள் இருந்தாலே ஒரு மனிதன் பணம் தொடர்பான செல்வந்தன் ஆகி விடுவான். மற்றும் அவன் விரும்பியதை ஈர்க்கும் நல்ல உணர்ச்சிகளை வைத்து மகிழ்ச்சியான சூழ்நிலையில் இருப்பான்

பணத்தால் வாங்க முடியாதது

பணத்தால் வாங்க முடியாதது   சுய விழிப்புணர்வு சுய மதிப்பீடு சுய ஒழுக்கம் தைரியமும் தன்னம்பிக்கையும் நேர்மறை சிந்தனைகள் நல்ல உணர்ச்சிகளை மேலோங்க செய்யும் குணங்கள் இந்த உலகில் பெற்ற அம்மா அப்பா அளவிற்கு, எதையும் எதிர்பராத அக்கறை , பாசம் காட்ட யாராலும் முடியாது. விதி விலக்குகள் விதி ஆகாது திருமண இணை என்பதும் பல எதிர்பார்ப்புகளுடன் இருப்பதே……. சில நச்சு குணம் கொண்ட பெற்றோர்களும் இருக்கத்தான் செய்கின்றனர். தன் குழந்தைகளுக்கு நல்லது செய்ததாக நினைத்துக் கொண்டு குழந்தைகளின் வாழ்வை கெடுக்கவும் செய்து விடுகிறார்கள்.

இந்த உலகில் வாழ்வதற்கு தகுதிகள்

இந்த உலகில் வாழத் தகுதிகள்  இந்த உலகில் வாழ்வதற்கு என்று தனியாக தகுதிகள் எதுவும் கிடையாது. இந்த பிரபஞ்சத்திற்கு நல்லது கெட்டது தெரியாது. சரி தவறு தெரியாது. அது மனிதன் வகுத்தது. கேட்டதை கொடுக்கும் தன்மை கொண்டது பிரபஞ்ச ஈர்ப்பு விதி. எதை கேட்கிறோம் என்பதை பொறுத்தே அனைவர் வாழ்வும் அமைகிறது. *எண்ணம் போல் வாழ்க்கை * கேளுங்கள் கொடுக்கப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் எதை எப்படி கேட்க வேண்டும் என்று தெரிந்தவர்கள் நல்லதை ஈர்க்கிறார்கள். தெரியாதவர்கள் கெட்டதை ஈர்க்கிறார்கள் இந்த உலகில் வாழ்வதற்கு அனைவருக்கும் உரிமையும் தகுதியும் உண்டு.

அறிவு, மனம் ,

அறிவு( புத்தி)  மற்றும் மனம் அறிவு என்பது நல்லது கெட்டது பற்றி யோசித்து முடிவெடுக்கக்கூடியது மனம் என்பது பிடித்தது பிடிக்காதது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியது. மனதிற்கு பிடித்த சில விஷயங்களை அறிவு தவறு என்று சொல்லும் . அதனால் அறிவு சொலவதை மனம் சில சமயங்களில் கேட்காது . அதனால் தான் சொல்வார்கள் அறிவிக்கு தெரியுது மனசு கேட்கல என்பார்கள். அறிவும் மனமும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டால் அந்த விஷயத்தில் மனக்குழப்பம் ஏற்படாது.. உதாரணமாக அறிவு சொல்லும் சப்பாத்தி உடம்புக்கு நல்லது என்று!! மனம் சொல்லும் எனக்கு பரோட்டா தான் பிடிச்சிருக்கு என்று!!! சில சமயங்களில் மனதிற்கு பிடித்த மாதிரியும் சில சமயங்களில் அறிவு சார்ந்தும் முடிவெடுக்க வேண்டி இருக்கும. அறிவும் மனமும் போட்டி போடுவதால் நமக்கு மனக்குழப்பம் ஏற்படும். ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து நாம் முடிவை எடுத்து விட வேண்டும் . முடிவெடுத்து விட்ட பிறகு அது தவறோ என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. எடுத்த முடிவு சரி ஏன்று இரண்டிற்கும் புரிய வைத்துவிட வேண்டும். நல்லது மட்டும் தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் , பிடித்ததை மட்டும் தான் செய்வேன் என்று ப

கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்

ஆறு அடிப்படை உணர்வுகளில் கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள் கோபம் பயம் வெறுப்பு துக்கம்  எல்லா உணர்வுகளுமே ஏற்படுவது இயற்கையே அது போதுமான அளவு இருப்பதும் நன்மையே. ஆனால் உணர்வு உணர்ச்சியாக மாறி பெரிய பாதிப்படையும் விளைவுகள் ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். 1) கோபம் மற்றவர்கள் செய்யும் தவறுகளுக்கு நமக்குள் ஏற்படுவது கோபம் ஆகும் கோபம் என்ற உணர்வு, எரிச்சல் அல்லது வெறி போன்ற உணர்ச்சியாக மாறும் . துன்பம்   பிறரால் ஏற்படுத்தப்படும் மன வலி. ஈடுசெய்யக்கூடிய இழப்பினால் ஏற்படுவது துன்பம். 2) பயம்   ஏற்படும் அச்ச உணர்வே பயத்தினை ஏற்படுத்தும்  நெருங்ஙடியை சந்திக்கும் போது மனரீதியான  தூண்டலே பயம் கவலை எதிர்கால பற்றிய பயம் ஏற்படுத்துவது கவலை. 3) வெறுப்பு பொருள், நபர், ,சமூகம் ஆகியவற்றால்  விருப்பமின்மை காரணமாக தோன்றுவதே வெறுப்பு 4)துக்கம் ஒருவரின் மரணத்தால்  ஏற்படும் பிரிவினால் ஏற்படும் அடக்கமுடியாத மனவலியே துக்கம் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்படுவதனால் வரும் மனவலியே துக்கம்  துயரம்   ஒன்று கிடைக்காமல் போனால் மனதளவில் ஏற்படுவது  துயரம். (துக்கம் துயரமாக மாறும்) வருத்தம் ( Sadness) நம்மை சுற்றியுள்ள

கனவு காணுங்கள்

கனவு காணுங்கள் தூங்கும் போது வருவது கனவல்ல,  உன்னை எது தூங்க விடாமல் செய்கிறதோ அதுவே கனவு. -------டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் வாழ்க்கையில் இலட்சியங்களை பொருத்தி அதனை அடைவதற்காக,  இலட்சியங்கள் தொடர்பான நாம் காணும் பட காட்சிகளே ( visualisation)  கனவுகள் ஆகும். நாம் அடைய வேண்டிய இலட்சியத்தை, நம் ஆசைகளை, அடைந்து விட்ட பிறகு எப்படி இருக்கும் என்பதை படக்காட்சிகளாக கனவு காண வேண்டும் என்பதே கனவு காணுங்கள் என்ற இந்த தலைப்பின் பொருளாகும்.  அவ்வாறு தொடர்ந்து நாம் கனவு கண்டால் அதற்கு பொருத்தமான வற்றை பிரபஞ்ச ஈர்ப்பு விதி நம்மிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் என்பதே ஆகும். எப்படி கனவு காண்பது?? வீடு கட்டுவது தான் எனது கனவு என்று என்றால் வீடு முழுக்க முடிந்து கிரகப்பிரவேசம் நடக்கும் பொழுது வீட்டிற்குள் நாம் எப்படி முதல் அடி எடுத்து வைப்போம் என்பதை கனவாக காணலாம்.  அனைவரையும் அழைப்பிதழ் வைத்து அழைத்தாகிவிட்டது . அனைவரும் காலையில் வந்து விட்டனர்.  அனைவருக்கும் பால் காட்சி கொடுக்கப்பட்டுள்ளது. வீடு முழுக்க அலங்காரமாக செய்யப்பட்டுள்ளது. வீட்டில் பூஜை நடந்தது அனைத்து உறவினர்களும் வந்து மகிழ்ச்சியாக வாழ்த்

கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்

கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்  A) கோவம் B) கவலை C) வருத்தம்  D) வெறுப்பு  E) பொறாமை  F) குற்ற உணர்வு  G) சுய வதை H) பாதிக்கப்பட்டவராக உணர்தல்  I)  துக்கம்  J)  துயரம் K)  பயம் L) சந்தேகம்  M) புலம்பல் N) குறை கூறல்  O) புறம் பேசுதல்  Q) அவமதித்தல் போன்ற உணர்வுகள் என்பது உணர்ச்சியாக பிறப்பெடுத்தால் கெட்டவற்றை ஈர்த்துவந்து சேர்த்து விடும். "நாம் எந்த உணர்ச்சியால் சூழப்பட்டுள்ளோமோ அதே உணர்ச்சியை அதிகரிக்க செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம்"  அதனால் கெட்டதை ஈர்க்கும் உணர்வுவை உணர்ச்சியாக மாறாமல் இருக்க கற்றுக் கொள்ள வேண்டும். (உணர்வுகள் உணர்ச்சிகள் வேறுபாடு ) எவ்வாறு கெட்டவற்றை ஈர்க்கும் உணர்வை  உணர்ச்சியாக மாறாமல் எப்படி இருப்பது?? உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் வேண்டும். 1) கோவம் . கோவம் நமக்குள் தோன்றினால் அது உணர்வு. அது மற்றவர் மீது வெளிப்படுத்தும் போது அது உணர்ச்சியாக மாறிவிடும். அதை வெளிப்படுத்தாமல் வேறு நல்லதை ஈர்த்துவந்து உணர்வாக மாற்றிவிட வேண்டும். கோபம் என்பது மற்றவர் செய்யும் தவறுகளால் நமக்கு ஏற்படும் உணர்வு ஆகும். அது அவர்களின் நிலை நாம் ஏ

உணர்வுகள் உணர்ச்சிகள் வேறுபாடு

உணர்வுகள் உணர்ச்சிகள் வேறுபாடு 1)நமக்குள் இருக்கின்ற சிறு வயது பதிவுகள், நாம் பின்பற்றுகின்ற மத நம்பிக்கைகளால் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகள், நமது புறச்சூழல்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்  ஆகியவைகளின் தாக்கமே நமது இயல்பாக இருக்கும். 2)நமது இயல்பிலிருந்து விலகும் போது நமக்கு ஏற்படுவது உணர்வு.  நாம் அதை மற்றவர்கள் மீது வெளிப்படுத்துவது உணர்ச்சி . 3)உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் இருப்பின் உணர்வு என்பது உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.   4) உணர்வு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்காது, அதை கட்டுப்படுத்தவும் தேவையில்லை.  உணர்ச்சி என்பது நமது  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்  5) உணர்வு என்பது நமக்குள் இருப்பது உணர்ச்சி என்பது நம்மில் இருந்து மற்றவர்கள் மீது வெளிப்படுவது. உதாரணமாக கோவம்  என்ற  உணர்வு  மற்றவர் செய்யும் விஷயம் நமது இயல்புக்கு எதிராக இருப்பின் நம்மில்  தோன்றிவது. அதை நாம் வெளிப்படுத்தாமலோ, கோவ உணர்வை வேறு உணர்வாக மாற்றியோ, கடந்துவிடவும் முடியும் . அவ்வாறல்லாமல் கோவத்தை அதற்கு காரணமான நபரை திட்டியோ, அடித்தோ

எண்ணங்கள்

நேர்மறை எண்ணங்கள், எதிர்மறை எண்ணங்கள் எண்ணங்களின் தொகுப்பே சிந்தனை நேர்மறை எண்ணங்களின் தொகுப்பு நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும். எதிர்மறை எண்ணங்கள் தொகுப்பு எதிர்மறை சிந்தனைகளை உருவாக்கும். எதிர் மறை சிந்தனைகள்  எதிர்மறை உணர்வுகளுக்கு வித்திட்டு எதிர்மறை உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். எந்த உணர்ச்சியுல் தொடர்ந்து இருக்கின்றோமோ அதை மேலும் மேலும் அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம். எனவே நாம் கட்டாயம் நேர்மறை சிந்தனைகளை உருவாக்கும் நேர்மறை எண்ணங்களுடன் இருப்பது அவசியம் ஆகும். நேர்மறை எண்ணங்கள் என்னால் முடியும் எனக்கு தைரியம் உண்டு நான் திறமைசாலி நான் சாதிப்பேன் எனக்கு  கிடைக்கும் என்னால் இதை சமாளிக்க முடியும் நான் பலருக்கு உதவும் நிலையில் இருக்கிறேன் நான் அனைவர் மீதும் அன்பு காட்டுகிறேன்  Etc எதிர்மறை எண்ணங்கள் எனக்கு வராது நான் அதிஷ்டம் இல்லாதவன் எனக்கு திறமை போதாது எனக்கு கிடைக்காது நான் ஏழை எனக்கு உதவ யாரும் இல்லை என் மீது அன்பு காட்ட யாருமில்லை  Etc நேர்மறை வார்த்தைகள்/ எதிர் மறை வார்த்தைகள்  (ஒரே அர்த்தமுள்ள வார்த்தைகள்) முடியும். --- முடியாமல்  போகாது ஞாபகமாக --- ம

எதிரிகளை உருவாக்கக் கூடாது

எதிரிகளை உருவாக்கக் கூடாது நாம் வசிக்கும் இடம், பணிபுரியும் அலுவலகம் , நட்பு வட்டாரங்கள், உறவுகள் போன்றவற்றில் நமக்கும் அவர்களுக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகளாலும் பண பிரச்சினைகளாலும் சொத்து பிரச்சினைகளாலும் மனஸ்தாபங்கள் ஏற்படக்கூடும்.  அப்படி மனஸ்தாபங்கள் ஏற்படும் போது அவர்களை விட்டு கொஞ்சம் தள்ளி நின்று பிரயாணிக்க கற்றுக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து அவர்களை எதிரிகளாக பாவித்து வசை வார்த்தைகளால் திட்டுவதோ, சபிப்பதோ கூடாது.  பழிவாங்கும் உணர்வை மனதில் வளர்த்துக் கொள்ளக் கூடாது.  எதிரிகளை உருவாக்காமல் வாழ்வதே ஒரு கலையாகும்.  அவர்களுடன் நாம் பழகும் தன்மையில் சற்று இடைவெளியுடன் நின்று போதுமான அளவு பழகிக் கொள்ள வேண்டும். அவர்கள் நம்மை எதிரியாக பார்த்தாலும் நாம் அவர்களை எதிரியாக பார்க்கக்கூடாது.  தெரியாமல் செய்கிறார்கள் என்ற புரிதல் இருக்க வேண்டும். அவர்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நாம் மனதிற்குள் வாழ்த்த வேண்டும்.

எதிர் கால திட்டமிடல்

எதிர் கால திட்டமிடல்   நம்முடைய எதிர்கால வாழ்க்கை எவ்வாறு இருக்க வேண்டும் என்று நாம் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும். விழிப்புணர்வு இன்றி, தன்னுணர்வற்ற நிலையில் வாழ்க்கை போகின்ற போக்கில் அப்படியே விட்டுவிட்டால் பெரிய முன்னேற்றங்களை காண இயலாது. இதில் எதிர்மறையாளர்களின் வாழ்க்கை பல சிக்கல்களுக்கு ஆளாகி திணரும் நிலை ஏற்படும். எனவே திட்டமிட்டு சிந்திப்பதன் மூலமாக வாழ்க்கையின் மிகப்பெரிய இலட்சியங்களை அடைய முடியும். நீ எதுவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறாயோ அதுவாக ஆவாய்        ---------புத்தர். திட்டமிடுதலில்  தினசரி திட்டங்கள்  மாதாந்திர திட்டங்கள்  வருடத் திட்டங்கள்  என்று  பிரித்து செயல்படுத்த  வேண்டும். தினசரி திட்டங்கள் தினமும் காலை எழுந்தவுடன் என்ன செய்ய வேண்டும்?  வீட்டில் உள்ள பணிகளை என்னென்ன செய்ய வேண்டும்?  அலுவலகம் சார்ந்த பணிகளில் என்னென்ன செய்ய வேண்டும்? தொழில் சார்ந்த பணிகளில் என்ன செய்ய வேண்டும்?  குடும்பத்திற்கான பணிகள் என்ன என்ன செய்ய வேண்டும்?  உடல் ஆரோக்கியத்திற்கும் மன ஆரோக்கியத்திற்கும் என்ன செய்ய வேண்டும்? என்று தினசரி முன்கூட்டியே திட்டமிட்டு எழுதி வைத்து அதை தினசரி நி

ஆண் பெண் உளவியல்

ஆண் பெண் உளவியல்  (கணவன் மனைவி ஒன்றாக வாழ்தல்) கணவன் மனைவி ஒன்றாக மகிழ்ச்சியாக வாழ வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்வார்கள்.  கணவன் மனைவி இருவரும் குறிப்பிட்ட வருடங்களுக்குப் பிறகு திருமணம் முடித்து வாழ்க்கையில் இணைபவர்கள்.  எனவே இருவருக்கும் வேறு வேறு மாதிரியான சூழ்நிலைகளில் வளர்க்கப்பட்டிருப்பார்கள்.  இருவரும் வேறு வேறு பாலினம் என்பதால் இருவருக்கும் வேறு வேறு ஆசைகள் வேறு வேறு லட்சியங்கள் வேறு வேறு பாதைகள் இருக்கும்.   இவர்கள் இருவரும் இணைந்து ஒரு வீட்டில் வசிக்கும் பொழுது பல கருத்து வேறுபாடுகள் வரத்தான் செய்யும் என்ற புரிதல் அவசியம். அப்படிப்பட்ட கருத்து வேறுபாடுகளின் மீறி தாம்பத்தியம்  இருவரையும் இணைத்து பிடித்து இருக்கும்.   குழந்தைகள் என்பது அவர்களின் எதிர்காலத்தை நோக்கி செல்வதற்கான வழிகளாக அமையும்.  அப்படிப்பட்ட வாழ்க்கையில் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்தால் முடிந்த அளவிற்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்கான வழிகள் பிறக்கும். சில தம்பதிகள் இயற்கையிலேயே ஒத்த கருத்து உள்ளவர்களாக இணைந்து இருப்பர்.  ஆனால் பலர் வேறு வேறு கருத்துக்கள் கொண்ட

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு. 1)குழந்தை வளர்ப்பு என்பது ஒரு கலையாகும். குழந்தைகள் நம் மூலமாக இவ்வுலகில் ஜனித்தவர்களே தவிர நமது அடிமைகள் அல்ல.  2)குழந்தைகளுக்கும் ஆசைகள், கனவுகள், லட்சியங்கள் இருக்கும் என்பதை பெற்றோர் உணர வேண்டும் அவற்றை மதிக்க வேண்டும். 3) பதின் பருவ குழந்தைகளுக்கு ஏற்படும் காதல் உணர்வுகள் வயதின் காரணமாக ஏற்படுகிறது என்பதை பெற்றோர் உணர வேண்டும். அவ்வாறு காதலில் உணர்வு ஏற்பட்ட குழந்தைகளை பத்திரமாக கையாள வேண்டும். முள்ளின் மீது பட்ட சேலையை எடுப்பதற்கு எவ்வளவு கவனம் தேவையோ அந்த அளவு கவனத்தை குழந்தைகளின் காதல் உணர்வுகளால் அவர்கள் பாதிக்கப்படாத அளவுக்கு பெற்றோர் செயல்பட வேண்டும். 4) குழந்தைகளை அக்கறையுடனும் பாசத்துடனும் தேவையான அளவு கண்டிப்புடனும் வளர்க்க வேண்டும். பதின்பருவ குழந்தைகளின் மீது காண்பிக்கப்படும்  அதிக அக்கறையும் ஆபத்து ஆகும். 5)குழந்தைகள் அவமானப்படும் அளவிற்கு வார்த்தைகளை பயன்படுத்தி அவர்கள் மனம் காயப்படும் அளவிற்கு நடந்து கொள்ளக் கூடாது. 6) குழந்தைகளுடன் அதிக நேரம் செலவிட வேண்டும். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன நல்ல விஷயங்களையும் பாராட்ட வேண்டும் குழந்தைகள் செய்யும் சி

மன உளைச்சலுக்கான காரணங்கள்

மன உளைச்சல் நாம் வாழ்கையில் மகிழ்ச்சியான மனநிலையுடன் வாழ வேண்டும்.  அப்போதுதான் பிரபஞ்ச ஈர்ப்பு விதி நமக்கு அதே மகிழ்ச்சியான சூழ்நிலைகளை மேலும் மேலும் அதிகப்படுத்தும்.  இப்படிப்பட்ட மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வாழ்வதை தடை செய்வது நமக்கு ஏற்படும் மன உளைச்சல் ஆகும்.  எனவே மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அதனை கலைந்து விட வேண்டும். மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகள் 1) மன தினமின்மை மன திடம் இல்லாமல்   எதற்கெடுத்தாலும். உணர்ச்சி வசப்படும் வர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும். 2) உடல் உபாதைகள்   உடல் ஆரோக்கியம் இல்லாமல் உடலின் உறுப்புகளில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருப்பது மனதளவில் தொய்வடை செய்து மன உளைச்சலை ஏற்படுத்தும். உடல் மொழிகளை கவனித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும்  3 )சரியான புரிதலற்ற  உறவுகளுடன் வசிப்பது. நம்முடன் வசிக்கும் உறவுகள் தாய், தந்தை, கணவன், மனைவி, குழந்தைகள், சகோதரர்கள், சகோதரிகள் , மாமியார் வீட்டு உறவுகள், சம்பந்தி வீட்டு உறவுகள் இவைகளில் நெருக்கமான உறவுகளில் சரியான புரிதல் இருக்க வேண்டும்.  அவ்வாறல்லாமல் புரிதலற்ற உறவுகளுடன் வசிக்கும் போது

உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம்

உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம்  உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது.  உடல் மொழிகளை கவனிக்க வேண்டும். உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் ஆகிய அனைத்தும் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடலும் மனமும் இரட்டை பிறவிகள் ஒன்றில்லாமல் ஒன்று சுகப்பாடாது. உடல் ஒழுக்கம் 1)பசித்த பின் சாப்பிட வேண்டும். 2)தாகம் எடுத்த பின் நீர் அருந்த வேண்டும. 3) நாக்கின் சுவை விரும்பும் படி உணவு உட்கொள்ள வேண்டும். 4) ஏப்பம் வந்த பிறகு தொடர்ந்து சாப்பிடக்கூடாது. 5) தியானம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும். 6) சீரான உழைப்பு, தேவையான ஓய்வு, நல்ல உறக்கம் கொள்ள வேண்டும். 7)உடல் மொழியை கவனித்து அதன்படி நடக்க வேண்டும். 8) உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் உணவு பண்டங்களையும் போதை வஸ்துக்களையும் சாப்பிடக்கூடாது. மன ஒழுக்கம் 1)நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சிந்தனை, நேர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும். 2) நல்லதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் பெரும்பாலான நேரங்களில் இருக்க வேண்டும் 3) யாரையும் பற்றி புறம் பேசுதல், குறை கூறுதல், சபித்தல், சண

பதின்பருவத்தில் ஏற்படும் காதல்

பதின் பருவத்தில் ஏற்படும் காதல் குழந்தை வளர்ப்பில் முக்கியமான கட்டம் பதின் பருவத்தில் உள்ள குழந்தைகளை பக்குவப்படுத்துவது பெற்றோரின் மிக முக்கிய பொறுப்பு.. உடலில் ஏற்படக்கூடிய வேதியியல் மாற்றத்தினால் எதிர்பாத்தின் பாலினத்தின் மீது ஏற்படுகின்ற உணர்வு தான் காதல் இது இயற்கையான ஒன்று என்ற புரிதல் பெற்றோருக்கு இருக்க வேண்டும் ஊரைக் கூட்டி, திட்டி தீர்த்து விடுவது, அதிக கண்டிப்பு, வார்த்தைகளால் அவமானப்படுத்துதல் , அடித்து துண்புறுத்து போன்றவை அவர்களை வீட்டை விட்டு ஓடி விடுவது மற்றும் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்கு கூட வித்திட்டு விடும். அன்பு காட்டுதல் வேண்டும். அதிக அக்கறை காட்டுகிறேன் என்று அவர்களை மனதளவில் நசுக்குதல் கூடாது.  பக்குவமாக புரிய வைக்க முயற்சி செய்ய வேண்டும்.  பெரும்பாலும் இவ்வகை காதலர்கள் திருமணங்கள் வரை செல்வதில்லை.

வளர்ந்த குழந்தைகள் மீது அளவாக மேலாண்மை

வளர்ந்த குழந்தைகள் மீது அளவான மேலாண்மை  குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் மீதுள்ள அதிகப்படியான பாசத்தின் காரணமாக அதிக   மேலாண்மை செய்வது,  அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எடுத்துக் கொள்வது அவர்களை வளர விடாமலும் தனித்தன்மையுடன் இருக்க விடாமல் செய்துவிடும். அவர்கள் மீது அதிகப்படியான பாசத்தை வைத்தாலும் அவர்கள் மீது காட்டும் மேலாண்மை அவர்கள் கற்றுக் கொள்ளும் படியாக இருக்க வேண்டும் .  1) வளர்ந்த குழந்தைகள் மீது அளவான மேலாண்மை செய்ய வேண்டும். அதிகப்படியான அக்கறை (அ) மேலாண்மை ( Micro Management ) அவர்களை வளர விடாது. 2) அவர்களின் எல்லா விஷயங்களிலும் பெற்றோர் அக்கரை என்ற பெயரில் தலையிடுவது அவர்களை கற்றுக் கொள்ள விடாது. 3) அதிகப்படியான மேலாண்மை குழந்தைகள் எப்போதும் பெற்றோரை சார்ந்து வாழும் தன்மைக்கு வழி வகுத்து விடும்.  அது பிற்காலத்தில் பெற்றோரின் பொறுப்பை அதிகமாக்கிவிடும். 4) எப்போதும் பெற்றோரிடமிருந்து அதிக எதிர்பார்ப்பை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தி விடும் 5) தனித் தன்மை ( Individually) போய்விடும் . திறமைகள் (Talent ) வெளிப்படாது. 6) பெற்றோரிடம் அதிக அதி

பெண்கள் மன வலிமை பெற வழிகள்

பெண்கள் மன வலிமை பெற வழிகள்  1) நேர்மறை எண்ணங்கள் கொண்டவர்களாக இருங்கள். 2)மகிழ்ச்சியான மனநிலை கொண்டவராக இருங்கள். 3)ஒவ்வொரு மனிதரையும் மரியாதையாக நடத்துங்கள். 4)இலட்சிவாதியாக இருங்கள். 5)அடுத்தலர் நலன் மீது அக்கரை கொள்ளுங்கள். 6)ஊக்குவிப்பராக இருங்கள். 7)பிறருக்கு உதவுங்கள். 8)உங்களுக்கென்று கனவுகளுடன் லாழுங்கள். 9)வாக்குருதிகளை காப்பாற்றுங்கள். 10)உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்  கொள்ளுங்கள்.  11)உங்களை  நீங்களை பாராட்டிக் கொள்ளுங்கள். நேசியுங்கள். 12) எண்ணம் சொல் செயல் ஒரே நேர்கோட்டில் இருக்கும் படி வாழுங்கள் (13) எதிரிகளை உருவாக்காதீர்கள். 14) உங்களை வெறுப்பவர்களை நீங்கள் வெறுக்காதீர்கள். அவர்களை ஆசிர்வதிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை சபிக்காதீர்கள். ( மரத்தின் பழம் மரத்தின் அடியில் விழும் , அது போல நமது சாபம் நம்மை தாக்கக்கூடும்) 15) நச்சு மனிதர்களை கையாள்வதை தெரிந்து கொள்ளுங்கள். மன வலிமை அதிகம் கொண்ட பெண்களால் வளர்க்கப்படும குழந்தைகள் நல்ல மனதிடத்துடன் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சவால்களாகவும் (Challenges) வாய்ப்புகளாகவும்  ( Oppertunities) பார்க்கும் மனநிலை கொண்டவர்களாக

சுய விழிப்புணர்வு ( Self Awareness)

சுய விழிப்புணர்வு ( Self Awareness ) நாம் பொதுவாக ஆரோக்கியத்திற்காக உணவு உட்கொள்வதில் அதிக அக்கறை கொள்வோம்.  ஆனால் மனம்  சிந்திப்பதில் நம் எண்ணங்களை பற்றி நாம் பெரியதாக கவலைப்படுவதில்லை.  நம் எண்ணங்கள், சிந்தனைகள், வார்த்தைகள், உணர்ச்சிகள் இவைகளை கவனித்து சரி செய்து கொள்வதே சுய விழிப்புணர்வு ஆகும் 1)நம் நடத்தை, நம் செயல்கள், நம் எண்ணங்கள், நம் உணர்வுகள், நம் உணர்ச்சிகள் ஆகியவற்றை புரிந்து கொள்வது தான்  சுய விழிப்புணர்வு .  வாழ்வில் முன்னேற சுய விழிப்புணர்வு அவசியம் தேவை. 2) தவறான நடத்தைகள், செயல்கள், எண்ணங்களை நாம் மாற்றிக் கொள்ள முயற்சிக்க வேண்டும்  3)தானியங்கி எண்ணங்கள் எதிர்மறையாக தான் இருக்கும் திட்டமிட்டு நேர்மறையாக சிந்திக்க கற்றுக் கொள்ள வேண்டும் எதிர்மறை எண்ணங்கள் எதிர்மறை உணர்ச்சிகளுக்கு வழி வகுத்து விடும்  4)எந்த உணர்வுகளுக்கும்  அடிமையாகாமல் வேறு நபரை போல் நம்மை நாம் பார்த்து கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளை ஆழ்மனதில் நுழைய விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்  5)எதையும் நிதானமாக சிந்திக்க பழக வேண்டும். தன்னுணர்வற்ற நிலையில் நம்  உணர்ச்சிகள் மேலோங்க விடக்கூடாது. வாழ்வில் இலக்கை அட

மகிழ்ச்சியான உணர்வு

மகிழ்ச்சியான உணர்வு  மகிழ்ச்சியான உணர்ச்சி மற்றும் மகிழ்ச்சிமான சூழ்நிலை செல்வந்தர் ஆக்கும் 1)தன்னுணர்வற்ற நிலையில் கூட கெட்டதை ஈர்க்கும் உணர்வுகளை உணர்ச்சியாக மாற்றி அதில் தொடர்ந்து இருக்கக் கூடாது. 2) ஈர்ப்பு விதிக்கு நல்லது கெட்டது தெரியாது மற்றும் ஈர்ப்பு விதிக்கு சரி தவறு தெரியாது. 3) ஈர்ப்பு விதி உணர்ச்சிகளை மட்டுமே அதிர்வுகளாக அறிந்து கொள்ளும்.  அதே அதிலுள்ள நபர்கள் விடயங்களை நம்மிடம் கொண்டுவந்து சேர்த்து விடும் 4) நேர்மறை எண்ணங்கள் , நேர்மறை வார்த்தைகள், நேர்மறை சிந்தனை, நேர்மறை உணர்வுகள், நேர்மறை உணர்ச்சிகள் ஆகியவற்றால் சூழ்ந்து இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும். இவைகள் நமது லட்சியங்களை அடையவும் செல்வந்தர் ஆகவும் உதவும். எப்போதும் மகிழ்ச்சியாக இருப்போம் விரும்பியதை அடைவோம்.

உணர்ச்சிகள் ( Feelings)

உணர்ச்சிகள் (Feelings) "எந்த உணர்ச்சியில் தொடர்ந்து இருக்கின்றோமோ அதை அதிகரிக்கச் செய்வதை பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவம்" உணர்வுகள் -- உணர்ச்சிகள் வேறுபாடு 1)நமக்குள் இருக்கின்ற சிறு வயது பதிவுகள், நாம் பின்பற்றுகின்ற மத நம்பிக்கைகளால் கொடுக்கப்பட்டுள்ள பதிவுகள், நமது புறச்சூழல்களால் ஏற்படுத்தப்பட்டுள்ள பதிவுகள்  ஆகியவைகளின் தாக்கமே நமது இயல்பாக இருக்கும். 2)நமது இயல்பிலிருந்து விலகும் போது நமக்கு ஏற்படுவது உணர்வு.  நாம் அதை மற்றவர்கள் மீது வெளிப்படுத்துவது உணர்ச்சி . 3)உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்ற புரிதல் இருப்பின் உணர்வு என்பது உணர்ச்சியாக மாறாமல் பார்த்துக் கொள்ளலாம்.   4) உணர்வு என்பது நமது கட்டுப்பாட்டில் இருக்காது, அதை கட்டுப்படுத்தவும் தேவையில்லை.  உணர்ச்சி என்பது நமது  கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் அதை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்  5) உணர்வு என்பது நமக்குள் இருப்பது உணர்ச்சி என்பது நம்மில் இருந்து மற்றவர்கள் மீது வெளிப்படுவது. உதாரணமாக கோவம் என்ற உணர்வு மற்றவர் செய்யும் விஷயம் நமது இயல்புக்கு எதிராக இருப்பின் நம்மில்  தோன்றிவது. அதை நா