மகாபாரத கதாபாத்திரங்கள்- பாண்டவர்கள் பிறப்பு

பாண்டவர்கள் பிறப்பு

குந்திபோஜன் மகளான குந்தி
(பெற்ற தந்தை சூரசேனன்)
துர்வாசமுனிவருக்கு சேவை செய்ததனால் அவளின் எதிர்காலம் குறித்து தெரிந்து கொண்ட துர்வாசர் குந்திக்கு ஐந்து வரங்கள் அளித்தார். ""ஏதாவது ஒரு  தேவனை மனதில் நினைத்துக் கொண்டு அந்த வரத்தினை சொன்னால் அந்த தேவன் மூலமாக அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பது தான் அந்த வரம்.""
 திருமணத்திற்கு முன்பு இதனை சோதித்துப் பார்க்க எண்ணிய குந்தி சூரியதேவனை நினைத்து அந்த முதல் வரத்தினை சொன்னாள். அப்பொழுது சூரியதேவனின் அருளால் கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தான்.
திருமணத்திற்கு முன் குழந்தை பிறந்ததனால் உலகிற்காக பயந்து அதனை அழகிய பேழையில் வைத்து கங்கையாற்றில் அனுப்பி விட்டாள்.

பின்னாளில் சுயம்வரம் மூலம் பாண்டுவை மணந்த பிறகு குழந்தை பாக்கியம் இல்லாததால் 
எமதர்மனை வேண்டி யுதிஷ்டிரனையும்

வாயுதேவனை வேண்டி பீமனையும் 

இந்திரனை வேண்டி அர்ஜுனனையும் பெற்றாள்.

 பாண்டுவின் இரண்டாவது மனைவியான மாதுரியிடம் மற்ற ஒரு வரத்தை சொல்லிக் கொடுத்தாள்.‌  அதன் மூலம் மாதுரி அஸ்வினி தேவர்களை நினைத்து நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர்களை பெற்றாள்.  பாண்டுவின் புத்திரர்களை பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டார்கள்


மகன்கள

I1)யுதிஷ்டிரன் (எமதர்மனின் அருளால்)
2)பீமன் (வாயு தேவனின் அருளால்)
3)அர்ச்சுனன்(இந்திரனின் அருளால்)


மாதுரியின் மகன்கள்

(அஸ்வினி குமாரர்கள் அருளால் பிறந்த இரட்டையர்கள்)


           *******************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி