மகாபாரத கதாபாத்திரங்கள் (75)- பிருகு முனிவர்
பிருகு முனிவர்
பிரஜாபதி
சப்த ரிஷிகளில் ஒருவர்
1) மனைவிகள்
கியாதி
காவியமாதா
புலோமா
2)மகன்கள்
ததா
விததா
சுக்ராச்சாரியார் (சுக்ரன்)
சியவனர்
3)மகள்
பார்கவி(ஸ்ரீ) (லட்சுமி)
4)காலில் கண்ணுடன் பிறந்தவர்
பிருகு முனிவர்
5)சிவன் பிரணவப் பொருள் மறக்க காரணமானவர்
பிருகு முனிவர்
6)பிருகு முனிவரின் காலில் இருந்த கண்ணை பிடுங்கி எடுத்தவர் யார்
விஷ்ணு
7)விஷ்ணு பூலோகத்தில் பிறக்க சபித்தவர்.
பிருகு முனிவர்
(அதனால் தான் விஷ்ணு பல அவதாரங்கள் (தசாவதாரம்) எடுத்து மண்ணில் மனிதனாக வாழ்ந்தார்)
8)பிருகு முனிவர் எழுதிய புத்தகம்
பிருகுசம்ஹிதா(ஜோதிடம் பற்றியது)
9) பிருகு முனிவரின் வழித்தோன்றல்கள்
சவுனகர்
(சூதபவுராணிகர்
புராண கதைகளை உலகிற்கு வழங்கியவர்.
இந்த புராண கதைகளை கேட்டு உலகிற்கு தந்தவர் சவுனகர்)
மார்கண்டேயர்
(பதினாறு வயதுடன் சீரஞ்சீவியாக மார்க்கண்டேயன் வாழ சிவபெருமான் அருளினார் )
ரிசிகமுனிவர்
ததீசிமுனிவர் (விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்டவர்)
உதங்கமுனிவர்
(ஜனமேஜயன் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்தவர் )
10)கிளைக் கதைகள்
அ)விஷ்ணு மார்பில் காலால் எட்டி உதைத்தல்
ஆ)சிவன் பிரணவம் பொருள் மறக்க காரணமாதல்
இ)லட்சுமி தேவி பிருகுவின் மகளாக பிறத்தல்
ஈ)தன் வழித்தோன்றலான ரிஷிகமுனிவரின் மனைவியான சத்தியவதிக்கு குழந்தை பாக்கியம் அருளல்.
உ)சிவனுக்கு பிருகு முனிவர் அளித்த சாபம்
ஊ ) பிரம்மாவுக்கு பிருகு முனிவர் அளித்த சாபம்.
எ) அசுரர்களுடன் சேர்த்து சுக்கிராச்சாரியரின் தாயும் பிருகு முனிவரின் மனைவியுமான காவியமாதாவை விஷ்ணு கொல்லல்.
ஏ)பிரம்ம ராட்சனும் புலோமாவும் கதை-- சியவனர் பிறப்பு
ஐ)சிவனை அகோர வடிவம் கொள்ள துர்வாசர் சாபம்
Comments
Post a Comment