Posts

Showing posts from December, 2020

மகாபாரத கதாபாத்திரங்கள்(126)-கேசி

கேசி (அரக்கன்) பல்வேறு வடிவங்கள் எடுக்கும் திறன் பெற்றவர்  கம்சனின் கையாலான கேசி என்ற அரக்கன்  கிருஷ்ணனை கொவ்ல குதிரை வடிவெடுத்து சென்றான்.  இவன் அரக்கன் என்பதை அறிந்த கிருஷ்ணன் குதிரையினா வடிவத்தில் இருந்த கேசியிடம் சண்டையிட்டு  குதிரையின் வாயைப் பிளந்து கேசியைக் கொன்றான். இது கேசி வதம் என்பர். கேசியை வென்றமையால் கண்ணன் கேசவன் என்று அழைக்கப்படுகிறான்

மகாபாரத கதாபாத்திரங்கள்(122)-சுப்ரியா

சுப்ரியா 1)கணவன் கர்ணன்  மனைவியருள் ஒருவள்  விருஷாலி   ( துரியோதனன்  தேரோட்டியான சத்தியசேனனின் சகோதரி) பொன்னுருவி சுப்ரியா ( துரியோதனன் மனைவியான பானுமதியின் தோழி) 2) மகன்கள் விருஷசேனன்   விருச்சகேது சுதமா ஷத்ருஞ்ஜயா திவிபடா சுஷேனா சத்தியசேனா சித்ரசேனா சுஷர்மா  . 3) குருஷேத்திரப் போருக்குப் பின் கர்ணனின் உயிருடன் இருந்த மகன் விருச்சகேது (குருசேத்திர போருக்குப் பின் இவன் அருச்சுனனின் அரவணைப்பில் இருந்தான்.)

மகாபாரத கதாபாத்திரங்கள்(128) -ஜனபதி

ஜனபதி தேவலோக அப்சரஸ் 1)பூலோகம் வருதல் கௌதம் முனிவரின் மகனான வில் அம்புடன் பிறந்த  சரத்வான் விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத வீரனாக இருந்தான். இதனால் அச்சமுற்ற  இந்திரன்  அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ்  ஜனபதியை  திருமணத்தை மறுக்கும்  சரத்வானிடம்  அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான். இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறியாத சரத்வான்  தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான். அக்குழந்தைகளுக்கு கிருபன் , கிருபி என பெயரிட்டு சந்தனு மகாராஜாவால் வளக்கப்பட்டார்கள்.

மகாபாரத கதாபாத்திரங்கள்(117) -சரத்வான்

சரத்வான் வில் அம்புடன் பிறந்தவர் கௌதம் முனிவரின்  வழித்தோன்றலான வில் அம்புடன் பிறந்த  சரத்வான் விற்போட்டியில் எவராலும் வெல்லமுடியாத  வீரனாக இருந்தான். இதனால் அச்சமுற்ற  இந்திரன்  அவனை கட்டுப்படுத்த தேவலோக அப்சரஸ்  ஜனபதியை  (ஜலபதி)திருமணத்தை மறுக்கும்  சரத்வானிடம்  அனுப்புகிறான். அவளது அழகிய தோற்றத்தில் தனது மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் காம உணர்வை எதிர்கொள்கிறான். இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் வெளிப்பட்டு கீழே நாணல் கற்றையின் மேல் விழுந்து இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறியாத சரத்வான்   தனது தவத்தைத் தொடர வேறிடம் செல்கிறான். பிறந்த குழந்தைகளை விலங்குகள் வளத்துவந்தன. அவ்வழியே வந்து அக்குழந்தைகளுக்கு எடுத்துவந்து  கிருபன் ,  கிருபி  என பெயரிட்டு  சந்தனு  மகாராஜாவால்  வளக்கப்பட்டார்கள்    கிருபையோடு (கருணை)   அக்குழந்தைகளை எடுத்து வளர்த்ததால் கிருபன் , கிருமி என பெயர் காரணம் பின்னாளில் கேள்வியுற்ற சரத்வான் தன் மகன் கிருபருக்கு ( கிருபாச்சாரியர் ) போர் கலைகள், வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் மற்றும்  உலக இரகசியங்களை கற்றுக் கொடுக்கிறான்.  இவ

மகாபாரத கதாபாத்திரங்கள்(106)-உகங்கர்

உதங்க முனிவர் கிருஷ்ண பக்தன் 1)குரு வேதா 2)குரு காணிக்கை குரு வேதாவின் மனைவிக்கு பௌசியனின் பட்டத்து அரசி அறிந்திருக்கும்  ஒரு ஜோடி கம்மல்களை குரு தட்சணையாக கேட்டார் குரு வேதா . 3) ஜனமேஜயன் நாகவேல்வியில் பங்கேற்பு தன்னை அலைக்கழித்த தட்சகனை பழிவாங்க  தன்னுடன் குரு குலத்தில் ஒன்றாக படித்த  ஜனமேஜயன்  நாகங்களை கொல்வதற்கு செய்த நாக வேள்வியில் பங்கேற்றார் உதங்கர் 4) கிளைக் கதை ஒரு ஜோடி கம்மல்களை தானமாக பெறுதல் தட்சகனால் கம்மல்கள் அபகரிப்பு மற்றும் மீட்டல்

மகாபாரத கதாபாத்திரங்கள்(114)-ஆஸ்திகர்

ஆஸ்திகர் 1)தந்தை தாய் ஜரத்காரு  என்ற முனிவருக்கும்,  வாசுகியின்  தங்கையான ஜரத்காரு என்ற நாககன்னிக்கும் பிறந்தவர். 2) ஜனமேஜயன்   நடத்திய நாக வேள்வியை தடுத்து நிறுத்தியவர் ஆஸ்திகர்  தன் தாய்  ஜரத்காரு   வேண்டுதலுக்கு இணங்க,  ஜனமேஜயனின்  நாக வேள்வியை நிறுத்தியதன் மூலம், நாக வேள்வியில் வீழ்ந்து இறக்கின்ற நிலையில் இருந்த தன் தாயின் இனத்தாரான  த ட்சகன்  முதலான நாகர்களை காத்தவர் ஆஸ்திகர் ஆவார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்(105)-உக்கிரசிரவஸ்

உக்கிரசிரவஸ் சூத பௌராணிகர் (புராணங்களை எடுத்துறைப்பவர் ) 1)தந்தை தாய் ரோமஹர்சனர் (சத்திரியர்)- அந்தணப்பெண்(தாய்)111 2)மகாபாரத இதிகாசத்தில் மகாபாரத இதிகாசத்தை ஜனமேஜயன் நடத்திய நாகவேள்விக்குப்பின்  ஜனமேஜயனுக்கு ,  வைசம்பாயனர்  எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் குருஷேத்திரம் போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, நைமிசாரண்யத்திற்கு   வந்தார்  உக்கிரசிரவஸ் (சௌதி).  நைமிசாராண்யம் காட்டில்  சௌனிகமகரிஷி  தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ்   (சௌதி) எடுத்துக் கூறினார்.

மகாபாரத கதாபாத்திரங்கள் (107)-கிந்தமாமுனிவர்

கிந்தமாமுனிவர் கிந்தமாமுனிவர் ஆண் மான் உருவெடுத்தது பெண் மானுடன் சல்லாபத்தில் ஈடுபட்டிருந்த போது காட்டில் விலங்குகளை வேட்டையாடிக் கொண்டிருந்த அஸ்தினாபுரமன்னன்  பாண்டு  தனது அம்பால், ஆண் மானை வீழ்த்தினான். கீீீழே வீழ்ந்த ஆண் மான், உயிர் பிரியும் வேளையில் மனித உருவம் பெற்ற கிந்தமாமுனிவர் பாண்டுவை சபித்தார்  இனி எப்பெண்ணுடனாவது உறவு கொண்டால் அப்போதே நீ வீழ்ந்து மடிவாய் எனச் சாபித்தார். ஒரு முறை பாண்டுவின் இரண்டாவது மனைவிமான மாதுரி தனியாக இருந்தபோது பாண்டு, கிந்தமாமுனிவரின் சாபத்தை மறந்து, மாதுரி மீது மயக்கும் கொண்டு உறவு கொள்ள முற்படும் போது பாண்டு அவ்விடத்திலே இறந்து போனார்.

மகாபாரத கதாபாத்திரங்கள் (125)-கிருதவர்மன்

கிருதவர்மன் 1)குலம் யாதவ குலமன்னன் 2) குருச்சேத்திரப் போரில் இவரின் பங்கு குருச்சேத்திரப் போரில் கௌரவர்கள் பக்கம் தனது நாராயணி சேனையுடன் சேர்ந்து போரிட்டவன். போரின் முடிவில் கௌரவர்கள் பக்கம் எஞ்சிய மூவரில் ஒருவன்.  ( அஸ்வத்தாமன் , கிருபர் ,   கிருதவர்மன்) அசுவத்தாமன்  இரவில் தூங்கிக்கொண்டிருந்த திருஷ்டத்யும்னன் , சிகண்டி , திரௌபதியின்  மகன்களான  உப பாண்டவர்களை  அசுவத்தாமனால்   கொல்லப்பட்டபோது  துணை நின்றவன்.  3) இறப்பு யாதவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோகத்தில்  சாத்தியகி   வாளால்  கிருதவர்மனின்  தலையை வெட்டிக் கொல்கிறார். இதனால் கோபமுற்ற  கிருதவர்மனின்  தரப்பினர்  சாத்தியகி  மற்றும் அவரின் தரப்பினரை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்  சாத்தியகி  கொல்லபடுகிறார். யாதவர் குலம் தங்களுக்குளே தாக்கிக்கொண்டு மொத்த யாதவ குலமே அழிந்து விடுகிறது.

மகாபாரத கதாபாத்திரங்கள்(124)-சாத்தியகி

சாத்தியகி 1)தந்தை சாத்யாகர் 2)தாத்தா சாத்தியகி சினி  3)குலம் யாதவ குலம் 4)குரு துரோணர் 5) கிருஷ்ணன் திருதராஷ்டிரன் இடம் தூது சென்றபோது உடன் இருந்தவர் சாத்தியகி 6)கிருஷ்ணன் சாத்தியகி உடன் உறவுமுறை கிருஷ்ணன் சாத்தியகிக்கு மாமன் முறை 7)குலப்பகை சாத்தியகியின் தாத்தா சாத்தியகி சினி , கிருஷ்ணனின் தந்தையான வசுதேவருக்காக சுயம்வரத்தில் பங்கேற்று தேவகியை வெல்கிறார். இதை ஏற்காத சோமதத்தர்   ( சந்தனுவின் சகோதரன் பாக்லிகரின் மகன்)மன்னர் சாத்தியகி சினியை எதிர்க்க, சோமதத்தரை தேர்க்காலில்கட்டி அவமதிக்கிறார் சாத்தியகி சினி.  இதற்கு பழிவாங்க சோமதத்தர் தன் மகன் பூரிஸ்சிரவஸ் முலம் சாத்தியகி சினியின் மகனான சாத்யாகரை அதே முறையில் அவமதிக்கிறார். இதற்கு பழிதீர்க்க  காத்திருக்கிரார் சாத்தியகி . இப்படி இரு குடும்பத்திற்கிடையே குலபகை நெடுங்காலமாய் நிலவுகிறது. பூரிஸ்சிரவஸ்  சாத்தியகியால்  குருச்சேத்திரப் போரில் கொல்லப்பட்டார். 14ம் நாள் பூரஸ்சிரவஸ் மரணத்திற்கு பழிதீர்க்க சாத்தியகியை தாக்குகிறார் சோமதத்தர் . சோமதத்தரை கொன்று தன் குல பகையை தீர்த்துக்கொள்கிறார் சாத்தியகி ,. 18 நாள் போர் முடிவில் உயிருடன

மகாபாரத கதாபாத்திரங்கள்-சிகண்டி பிறப்பு

சிகண்டி பிறப்பு காசி இளவரசியான  அம்பா  (அம்பை) ஐ சால்வன் காதலித்தவன பீஷ்மர்  காசி இளவரசிகளை குரு நாட்டு இளவரசனான  விசித்திரவீரியனுக்காக   தனது தேரில் வைத்து கடத்திச் செல்கையில், சால்வ நாட்டு இளவரசன் தனது காதலியான அம்பாவை மீட்க, பீஷ்மருடன் போரிட்டு தோற்கிறான். அம்பா, சால்வ இளவரசனின் காதலி என அறிந்த பீஷ்மர், அம்பாவை சால்வனிடம் செல்ல அனுமதிக்கிறார். ஆனால் சால்வ இளவரசன் அம்பாவை மணக்க மறுத்தான். தன் காதலனை அடைய தடையாக இருந்த பீஷ்மரை அடுத்த பிறவியில் கொல்லச் சபதம் மேற்கொண்டு தீக்குளிக்கிறாள். அம்பா மறுபிறவியில் துருபதனுக்கு மகளாக   சிகண்டியாக  பிறந்து பீஷ்மரின் இறப்புக்கு காரணமாகிறாள். (சிகண்டி ஆணாக பிறந்த பெண்மை குணங்களை கொண்டவன் என்றும் கூறப்படுகிறது. பெண்னை திருமணம் முடிந்து உண்மை அறியும் சமையம்  அவமானம் அடைந்து காட்டிற்கு சென்று தற்கொலை முயற்சி செய்கிறான். யக்ஷனின் அருளால் ஆண்மை கிடைக்கப்பெற்று நாட்டிற்கு திருப்பி மனைவியுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்று வாழ்ந்தான் என்ற கதையும் உண்டு) இறப்பு குருச்சேத்திரப் போரின் பதினெட்டாம் நாள் போருக்குப்பின் அஸ்வத்தாமனால் கொல்லப்பட்டாள்

மகாபாரத கதாபாத்திரங்கள்(123)-நகூஷன்

நகூஷன் 1)தந்தை  ஆயு 2) மகன் மருமகள் யயாதி -  தேவயானி (முதல் மனைவி) சர்மித்தை (இரண்டாவது மனைவி) 3) பேரன்கள் யயாதியின்  முதல் மனைவி  தேவயானிக்கு  பிறந்தவர்கள் யது துர்வசு சர்மிஷ்டை   யயாதியை  ரகசிய திருமணம் செய்து பிறந்த பிள்ளைகள் துருயு அனு புரு 4) கதை அ) இந்திரன் இந்திய பதவியை இழத்தல் ஆ)100 அஸ்வமேதயாகம் செய்து இந்திர பதவியை அடைதல் இந்திரன் மனைவியான இந்திராணியை மணக்க சப்த ரிஷிகளை தூக்கச்சொல்வி பல்லக்கில் செல்லல். அகத்தியர் பாம்பாக மாற நகூஷனுக்கு சாபம் கொடுத்தல் தர்மரால் சாப விமோசனம் அடைததல்

மகாபாரத கதாபாத்திரங்கள்-கல்பகாலம்

கல்பகாலம் மும்மூர்த்திகளில் ஒருவரும்,படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு பகலின் கால அளவு கல்பகாலம் எனப்படுகிறது. அதாவது ஆயிரம் மகாயுகங்களைக் கொண்டது. ஒரு மகாயுகம்(சதுர்யுகம் ) என்பது நான்கு யுகங்களைக் கொண்டது.     யுகம்         ஆண்டுகள் கிருத யுகம் .    1728000  திரேதாயுகம் . 1296000 துவாபரயுகம்    864000 கலியுகம் .          432000 மொத்தம்.      43,20,000 ஒரு மகாயுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகளை கொண்டது.  ஆயிரம் மகா யோகங்கள் என்பது 432 கோடி ஆண்டுகளை கொண்டது. இதுவே பிரம்மாவின் பகல் பொழுது கால அளவாகும். ஒரு கல்ப காலத்தில் 14 "மனு"க்களும்  14 "இந்திரர்கள்" வந்து செல்வர். "மனு" என்பவர் பூமியை ஆட்சி செய்பவர்   "இந்திரன்" தேவலோகத்தை ஆட்சி செய்பவர்  ஒரு மனுவின் (ஒரு இந்திரனின்) காலம் 71 மகாயுகங்கள்‌.  இக்கால அளவே " ஒரு மன்மந்திரம்" என்று பெயர் . இரு மன்வந்திரங்களுக்கு  இடையில் ஒரு சிரிய இடைவெளி காலம் இருக்கும். அதன் பெயர் "சந்தியா காலம்" எனப்படும். அதாவது ஒரு கிருதயுக கால அளவு(17.28 லட்சம் ஆண்டுகள்) இடைவெளி(சந்தியா காலம

மகாபாரத கதாபாத்திரங்கள்- பீஷ்மர் பிறப்பு

பீஷ்மர் பிறப்பு காசிபர் - வாசு  ( தட்சனின்  மகள்) தம்பதிகளின் மகன்கள்  அஷ்டவசுக்கள்  . அஷ்டவசுக்கள் என்பவர்கள் இயற்கையை நிர்வகிப்பவர்கள்.  அவர்களில்  பிரபாசன்  என்ற   வசு  தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக மற்ற வசுக்களுடன் சேர்ந்து  வசிஷ்டரின்   காமதேனு  பசுவை கவர்ந்து செல்கையில்  வசிஷ்டரால்  மண்ணுலகில் பிறக்க சாபமிட்டார் . மண்ணுலகில் பிறக்கும்போது  பிரபாசனுக்கு   மனைவி பாக்கியம் இருக்காது என்றும் சாபமிட்டார். அதன்மூலமாக அஷ்டவசுக்கள் தேவலோக மங்கையான  கங்கையை  அணுகினர் மற்றவர்களுக்கு மண்ணுலகில் பிறந்தவுடன் சாபவிமோசனம் பெறவும்  பிரபாகரனுக்கு  மட்டும்   மண்ணுலகில் நெடுங்காலம் வாழவும்  கங்கையின்  மைந்தர்களாக பிறக்க வேண்டிக்கொண்டனர். அதன்படி  கங்கை (கணவர் சந்தனு)  தனக்கு பிறந்த ஏழு குழந்தைகளையும் பிறந்தவுடன் ஆற்றில் விட்டார்.  எட்டாவது மகனான  தேவவிரதனை  ( பீஷ்மர் )வளர்த்து ஆளாக்கி  அவனது தந்தையான  சந்தனு  மகாராஜாவிடம ஒப்படைத்தார்.

மகாபாரத கதாபாத்திரங்கள்- திரௌபதி, திருஷ்டத்யும்னன் பிறப்பு

திரௌபதி- திருஷ்டத்யும்னன் பிறப்பு துருபதன் நடத்திய வேள்வியில் இருந்து பிறந்தவர்கள்  திரௌபதி - திருஷ்டத்யும்னன் . வேள்வியில் இருந்து பிறந்ததால்  யாக்கிசேனை, கிருஷ்ணை என்ற பெயரும் திரௌபதிக்கு உண்டு.

மகாபாரத கதாபாத்திரங்கள்-தத்தாத்ரேயர் பிறப்பு

தத்தாத்ரேயர் பிறப்பு  கற்பு நெறியுடன் வாழ்ந்து வரும் அத்திரி மகரிஷியின் மனைவியான   அனுசூயா தேவி மீது மும்மூர்த்திகளின் மனைவிகளும் பொறாமை கொண்டனர்.  அவள் கற்பை சோதனை செய்ய  தமது கணவன்மார்களை கட்டாயப்படுத்தி மாறு வேடத்தில் முனிவர்கள் உருவில் சென்று அவளிடம் பசிக்கு உணவு போடுமாறு கேட்க வைத்தார்கள். அவளும் வந்துள்ள முனிவர்களுக்கு உணவு சமைத்தாள். உணவை பரிமாற்ற வந்தவளிடம் அவர்கள் ஒரு வினோத கோரிக்கையை வைத்தார்கள். அவள் உடலில்  ஆடையின்றி உணவு பறிமாறினால் மட்டுமே சாப்பிடுவோம் எனக் கூறினார்கள்.  சம்மதிக்காமல் முனிவர்களை பசியோடு அனுப்புவது பாவச்செயலாகும். பசியோடு  உள்ள அவர்கள் சாபம் தந்துவிட்டால் என்று யோசித்த அனுசூயா  தேவி தனது கணவனை மனதில் நினைத்து வேண்டினாள். அடுத்த நிமிடமே மும்மூர்த்திகளும் பிறந்த குழந்தைகளாகி விட்டார்கள்.  அந்தக் குழந்தைகளை வாரி எடுத்து உணவளித்தாள். அவள் கணவர்  அத்திரி மகரிஷி திரும்பி வந்தார். நடந்ததைக் கேட்டு அறிந்தார். தனது ஞான திருஷ்டியினால் நடக்கபோவதை அறிந்து கொண்டார். குழந்தைகள் அவளிடம் கொஞ்சி  விளையாடின. அனுசூயாவை சோதிக்கச் சென்ற தமது கணவன்மார்கள் திரும்பி வராததைக் கண்

வாழ்வியல் கலை- நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

  நண்பர்களை தேர்ந்தெடுத்தல்   நட்பு என்பது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு உறவு..    இருவரிடையேயோ குழுக்களாகவோ அமையும்.   புரிதல், அனுசரித்தல், உதவுதல், கருத்துக்களைப் பரிமாறுதல் போன்ற இனங்களில் ஒரே மாதிரியான குணங்களுடையவர் உடனான உறவுகள் நட்பாக மலருதல் இயல்பு.  இதில், பாலின மாறுபாடுகளுடன் கூட நட்புகள் அமையும். நட்பென்பது நேரடி நட்பாகவும், மறைமுக நட்பாகவும், கடித வழி நட்பு, இன்றைய முகநூல்  நட்பு என பல வகைகள் உள்ளன.      நட்புணர்வு என்பது பிரதிபலனை எதிர்பார்க்காமல், மனதில் தியாக எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக உணர்வுகளையும் காட்டும் மனக்கண்ணாடியாக அமைய வேண்டும். நட்பு நம்பிக்கையை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு உருவாகக்கூடியது. அதனால்தான், நட்புகளில் விரிசல்கள் ஏற்படும்போது,  நம்பிக்கை துரோகி என்று சொல்வதுமுண்டு.  துரோகம் என்பது,  நட்பின் விரிசலுக்கான இடமாக அமைந்து விடும். நண்பர்களை தேர்ந்தெடுத்து, நெருக்கத்திற்கான அளவை  நிர்ணயம் செய்து பழக வேண்டியது அவசியமாகும்.                                                      அனைவரிடமும் நட்பு உணர்வோடு இருத்தல் மிக அவசியம்.    ஆனால், யாரிடம் எவ்வளவு நட்புக்கா

மகாபாரத கதாபாத்திரங்கள்(121)-கௌரவர்கள்

கௌரவர்கள் 1)தந்தை திருதராஷ்டிரன் - காந்தாரி (தம்பதிகளின் மகன்கள்  துரியோதனன்   துச்சாதனன்   விகர்ணன் உள்ளிட்ட 100 பேர்) 2)சகோதரி துச்சலை (கணவன் ஜெயந்தன் ) 3)தந்தை வழி தாத்தா விசித்ரவீரியன் - அம்பிகா 4)தாய் வழி தாத்தா சுபலன் 5)தாய் மாமன் சகுனி 6) தந்தை வழி சகோதரர்கள் பாண்டவர்கள் 7)கௌரவர்கள் பெயர்கள் மகன்கள் 1) துரியோதனன் 2) துச்சாதனன் 3)துசாகன் 4)ஜலகந்தன் 5)சமன் 6)சகன் 7)விந்தன் 8)அனுவிந்தன் 9)துர்தர்சனன் 10)சுபாகு 11)துஷ்பிரதர்ஷனன் 12)துர்மர்ஷனன் 13)துர்முகன் 14)துஷ்கரன் 15)விவிகர்ணன் 16)விகர்ணன் 17)சலன் 18)சதவன் 19)சுலோசனன் 20)சித்ரன் 21)உபசித்ரன் 22)சித்ராட்சதன் 23)சாருசித்ரன் 24)சரசனன் 25)துர்மதன் 26)துர்விகன் 27)விவித்சு 28)விக்தனன் 29)உர்ணநாபன் 30)சுநாபன் 31)நந்தன் 32)உபநந்தன் 33)சித்திரபாணன் 34)சித்ரபாணன் 35)சித்திரவர்மன் 36)சுவர்மன் 37)துர்விமோசன் 38)மகாபாரு 39)சித்திராங்கன் 40)சித்திரகுண்டால 41)பிம்வேகன் 42)பிமுபன் 43)பாலகி 44)பாலவரதன் 45)உக்ரயுதன் 46)சுசேனன் 47)குந்தாதரன் 48)மகோதரன் 49)சித்ரயுதன் 50)நிஷாங்கி 51)பஷி 52)விருதகரன் 53)திரிதவர்மன் 54)திரிதட்சத்ரன் 55)சோமகீர்த்தி 5