Posts

சனி பிறப்பு

சனி பகவான் பிறப்பு  சூரிய பகவானின் மனைவி சாந்தா. தன் வலிமையை அதிகரிக்க சிவனை நோக்கி தவம் இருக்க சென்றதால் தன்னுடைய நிழலான சாயாதேவியை மனைவியாக விட்டு விட்டு சென்றார். சாயாதேவிக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன  மனு சனி  தவதி சனி பகவான் சிவனின் தீவிர பக்தி கொண்டதால் உலகின்  நன்மை தீமையை பகிர்ந்தளிக்கும் பொருப்பு சனிக்கு தரப்பட்டது.

துரோணர் பிறப்பு

துரோணர் பிறப்பு  பரத்வாஜர என்ற முனிவர் கங்கை நதி ஓரத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது  ஒரு அழகிய பெண் குளித்துக் கொண்டிருக்கிறதை பார்க்கிறார். அந்தப் பெண்ணின் பேரழகை கண்டு  அவர் மயங்குகிறார்.  எனவே அவருக்கு தன்னால் சுக்கிலம் வெளியேறுகிறது  அதனை ஒரு பானையில் சேகரித்து கொண்டு வந்து தன்னுடைய குடில் வைக்கிறார்.  சிறிது காலம் கழித்து ஒரு குழந்தை வருகிறது அந்த குழந்தைக்கு அவர் துரோணன் என்ற பெயர் வைக்கிறார். துரோணன் என்றால் பானை என்ற பொருள்.  இவர்தான் பிற்காலத்தில் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் குருவாக இருந்த துரோணாச்சாரியார் ஆவார்.

சத்துமாவு

சத்துமாவு அரைக்க தேவையான பொருட்கள்  (Ingredients) அரிசி மற்றும் கோதுமை வகைகள் தலா ஒரு டம்ளர் (ஊறவைத்து கழுவி காயவைத்து) 1)கைக்குத்தல் அரிசி 2) மாப்பிள்ளை சம்பா அரிசி  3) கருப்பு கவுனி அரிசி  4) மூங்கில் அரிசி 5)சம்பா கோதுமை  பயறு வகைகள் ( தனித்தனியாக வறுக்கவும்) 1) கம்பு 500g 2) கேழ்வரகு 500g 3) வெள்ளை சோளம்  500g (மற்றவை அனைத்தும் நலா 100g) 4) சிவப்பு சோளம் 5) கருப்பு கொண்டைக்கடலை 6)ராஜ்மா 7) பச்சை பட்டாணி  8)பாசி பயிறு  9)கொள்ளு 10) மக்கா சோளம்  ஜுரணம் மற்றும் உடல் சூடு தணிக்க(வறுத்து) 2)சுக்கு 50g  ( Protein and taste) (வறுத்து) 1)வேர்கடலை 200g 2)பாதாம்  200g 3)வெள்ளை எள் 50g 4)சவ்வரிசி 100g 5)பார்லி 100g 6)பொட்டுக்கடலை 100g 7)சோயா பீன்ஸ் 100g 8)கருப்பு உளுந்து 100g சிறுதானிய வகைகள் (வறுத்து) (தலா 100 கிராமம்) 1)தினை 2)சாமை 3)வரகு 4)குதிரை வாலி அளவுகள் அவரவர்களுக்கு ஏற்றபடி மாற்றிக் கொள்ளலாம். சத்து மாவில் செய்யக்கூடிய உணவுகள்  சத்துமாவு கூழ்  சத்து மாவு களி  சத்துமாவு முருங்கைக்கீரை அடை  சத்து மாவு கஞ்சி ( இனிப்பு...

நெல்லிக்காய் டீ

நெல்லிக்காய் டீ  நெல்லிக்காய்   உடலுக்கு மிகவும் சிறந்த உணவு அதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்மைகள்   அல்சரை குணமாக்குகிறது,  எடை குறைய உதவுகிறது மலச்சிக்கலை சரி செய்கிறது,  ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, பார்வையை மேம்படுத்துகிறது,  ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது,  நீரிழிவை தடுக்கிறது,  கல்லீரலுக்கு நல்லது, இதயத் தசைகளை வலிமையாக்குகிறது, முடி பிரச்சினைகளை சரி செய்கிறது, ஞாப சக்தியை வலுவாக்குகிறது, கெட்ட கொழுப்பை குறைக்கிறது, ஞாபகசக்தியை அதிகரிக்கிறது, பொலிவான முகத் தோற்றம், வயது முதிர் தோற்றத்தினை குறைக்கிறது,  சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது.  இன்னும் ஏராளமான பலன்கள் உண்டாகும். தினசரி Fresh நெல்லிக்காயை பயன்படுத்தலாம் அல்லது நெல்லி சாற்றினை Ice cube ஆக தயார் செய்து Freezer ல் வைத்து டீ போடும்போது பயன் படுத்தலாம்  நெல்லிக்காய் டீ செய்முறை   நெல்லிக்காய் ஜூஸ் சிறிதளவு  இஞ்சி சிறிதளவு  10 புதினா இலைகள்  5 செம்பருத்தி பூக்கள்  ஆகியவற்றை கொதிக்கவைத்து வடிகட்டி  எலுமிச்சை சாறு மற்றும் ...

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள்  இந்த புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்  கர்ப்பத்தினாலும், பிள்ளைகளை பெறுவதனாலும், பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும் மற்றும் பிள்ளைகளை அதிகமாக பெறுவதனால் ஆண் பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் பெண்கள் நலத்துக்கு ஆண்களால், ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும்  நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்ததே எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் பெரியார்  தலைப்புகள்   1) கற்பு 2) கற்பும் வள்ளுவரும்   3) காதல் 4)கல்யாண விடுதலை  5) மறுமணம் தவறல்ல  6) விபச்சாரம்  7) விதவைகள் நிலைமை  8 ) சொத்துரிமை  9)கர்ப்பத்தடை 10) பெண்கள் விடுதலைக்கு " ஆண்மை"  அழிய வேண்டும் . மேலும் விவரங்களுக்கு  புத்த...

பெண் ஏன் அடிமையானாள் தலைப்பு 3 - காதல் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 3 - காதல ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  காதல்   காதல் என்றால் என்ன?  அதற்கு சக்தி என்ன?  அது எப்படி உண்டாகிறது?  அது எதுவரையில் இருக்கின்றது?  அது எந்தெந்த சமயங்களில் உண்டாகிறது?  அது எவ்வபோது மறைகின்றது ? அப்படி மறைந்து போய்விடுவதற்கான காரணம் என்ன? என்பதைப் போன்ற விஷயங்களை கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை பிரதானப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கிவிடும் என்கிறார் பெரியார். காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும் . அப்படி வேறு ஒருவரிடம் ஏற்பட்டால் அது காதலாக இருக்க முடியாது அது விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும்  ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமும் விரசமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது. இந்த காதல் காரணத்தா...