பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்
பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்) புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம் 2) வள்ளுவரும் கற்பும் தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் மழை. " தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்" வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார். எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம். அவ்வையாரின் "தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது) "பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்) வள்ளுவரின் "பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது) பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீ