மகாபாரத கதாபாத்திரங்கள்- கர்ணன் பிறப்பு

கர்ணன்

குந்திபோஜன் மகளான குந்தி
(பெற்ற தந்தை சூரசேனன்)
துர்வாசமுனிவருக்கு சேவை செய்ததனால் அவளின் எதிர்காலம் குறித்து தெரிந்து கொண்ட துர்வாசர் குந்திக்கு ஐந்து வரங்கள் அளித்தார். ""ஏதாவது ஒரு  தேவனை மனதில் நினைத்துக் கொண்டு அந்த வரத்தினை சொன்னால் அந்த தேவன் மூலமாக அவளுக்கு ஒரு குழந்தை பிறக்கும் என்பது தான் அந்த வரம்.""
 திருமணத்திற்கு முன்பு இதனை சோதித்துப் பார்க்க எண்ணிய குந்தி சூரியதேவனை நினைத்து அந்த முதல் வரத்தினை சொன்னாள். அப்பொழுது சூரியதேவனின் அருளால் கர்ணன் கவச குண்டலங்களோடு பிறந்தான்.
திருமணத்திற்கு முன் குழந்தை
பிறந்ததனால் உலகிற்காக பயந்து அதனை அழகிய பேழையில் வைத்து கங்கையாற்றில் அனுப்பி விட்டாள்.

கர்ணனை தேரோட்டியான அதிரதன்- ராதை தம்பதியினர் எடுத்து வளர்த்தனர்.

பின் நாளில் குந்தி
 பாண்டுவை சுயம்வரம் மூலம் மணந்தாள்

          ********************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி