மகாபாரத கதாபாத்திரங்கள்- சிசுபாலன் பிறப்பு
சிசுபாலன் பிறப்பு
கிருஷ்ணரின் அத்தை மகன் .
.சிசுபாலன் (சேதி நாட்டு அரசன்)பிறக்கின்ற பொழுது நான்கு கைகளையும் மூன்று கண்களையும் கொண்டிருந்தான். அப்பொழுது ஒரு அசரீரி இவன் யாருடைய மடியில் வைக்கும் பொழுது அந்த கூடுதலாக உள்ள இரண்டு கைகளும் கூடுதலாக உள்ள கண்ணும் மறைகிறதோ அவனாலேயே இவன் கொல்லப்படுவான் என்று கூறி மறைந்தது.
இதனால் அவரின் தாய் அனைத்து அரசர்கள் இளவரசர்கள் அனைவரையும் அழைத்து சிசுபாலனை அவர்கள் மடியில் வைத்தாள்.
கிருஷ்ணன் மடியில் வைக்கும்பொழுது சிசுபாலனின் கூடுதலாக இருந்த இரண்டு கைகள் கூடுதலாக இருந்த கண் உதிர்ந்தது
இதனால் கிருஷ்ணனால் தான் இவனுக்கு மரணம் ஏற்படும் என்பதை தெரிந்து கொண்ட அவளின் தாய் "என் மகன் எந்த தவறு செய்யினும் நீவீர் பொறுக்க வேண்டும்" என்று வரம் கேட்டாள்.
அதற்கு கிருஷ்ணன் அவனது 100 தவறுகளை பொறுப்பேன் என்று வரமளித்தான்.
*********************
Comments
Post a Comment