மகாபாரத கதாபாத்திரங்கள்- கிருபர்,கிருபி பிறப்பு

கிருபாச்சாரியர்,கிருமி பிறப்பு


சரத்வான்
( கௌதம முனிவரின் பேரன்) 
பிறக்கும்போதே வில் அம்புகளுடன் பிறந்தவர். இளமைக்காலத்தில் வேதங்களைப் படிப்பதில் விருப்பமின்றி அனைத்து ஆயுதங்களையும் கற்றுத் தேர்ந்தான். அவனை விற்போட்டியில் யாராலும் வெல்லமுடியாதிருந்ததால்  இந்திரன் அவனது ஆற்றலை கட்டுப்படுத்த தேவலோக மங்கை ஜனபதியை  சரத்வானிடம் அனுப்புகிறான். அவளது அழகில் மனதை பறிகொடுத்தாலும் அவனது தவ வலிமையால் மோகத்தை வெள்கிறான்.
இருப்பினும் அவனிடமிருந்து சுக்லம் கீழே  செடிகளில் விழுந்து, இரண்டாகப் பிளந்து ஒரு ஆணும் ஒரு பெண்ணும் பிறக்கிறார்கள். இதனை அறிந்திராத சரத்வான் அங்கிருந்து தனது தவத்தைத் தொடர  சென்றுவிடுகிறார்.
அந்த வழியாக வந்த சந்தனு மகாராஜா இக்குழந்தைகளின்  எடுத்துச் சென்று கிருபன்,கிருபி எனப் பெயரிட்டு வளர்க்கிறான். பின்னால் இதனை அறிந்ததும் சரத்வான் அரண்மனைக்கு வந்து தனது குழந்தைகளுக்கு  வில்வித்தை,வேதங்கள், சாத்திரங்கள் அனைத்தையும் கற்றுக் கொடுக்கிறார்.
பின்னாளில் கிருபாச்சாரியர் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களுக்கு குருவாக திகழ்ந்தார்.

          *******************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி