மகாபாரத கதாபாத்திரங்கள்- கௌரவர்கள் பிறப்பு

கௌரவர்கள் பிறப்பு


திருதராஷ்டிரன் பிறவியில் கண் தெரியாதவன். காந்தார இளவரசியான சுபலனின் மகளான காந்தாரியை மணந்தான். கணவன் பார்க்காத இப்பூலகை தானும் பார்க்க விரும்பாத காந்தாரி தன்னுடைய கண்களையும் கட்டிக்கொண்டு வாழ்ந்தாள்.
 திருதராஷ்டிரனு பிறவிக் குருடு என்பதால் ராஜ்யம் மறுக்கப்பட்டது 
எனவே தனது தம்பியான பாண்டுவிற்கு முன் தான் ஒரு  வாரிசை பெற்று ராஜ்யத்திற்கு உரியவனாக்க வேண்டும் என்று எண்ணினான்‌
காந்தாரி கர்ப்பமுற்று 2 ஆண்டுகள் கழிந்தும் குழந்தை பிறக்கவில்லை .
அதற்குள் பாண்டுவின் மனைவியான குந்திக்கு யுதிஷ்டிரன் பிறந்துவிட்டான்.

எனவே காந்தாரி ஒரு உலக்கையை கொண்டு தன் வயிற்றில் அடித்துக் கொண்டால் அதனால் அவளுக்கு சதைப்பிண்டம் பிறந்தது. துன்பமுற்ற காந்தாரி வேதவியாசரை அழைத்து தாங்கள் எனக்கு நூறு புதல்வர்கள் பிறப்பார்கள் என்று கூறினீர்களே என்று கேட்டு புலம்பினாள்.
 அப்போது வேதவியாசர் அந்த பிண்டங்களை 100 பிரிவுகளாக பிரித்து நெய் குடங்களில் இட்டு வைத்தார் .
காந்தாரியின் விருப்பப்படி 101வது குடத்தில் ஒரு பெண் பிறப்பதற்காக இட்டு வைத்தார் .
பிறகு முதல் குழந்தையாக துரியோதனனும் இரண்டாவது குழந்தையாக துச்சாதனன் உள்ளிட்ட 100 குழந்தைகள் காந்தாரிக்கு பிறந்தது.
திருதராஷ்டிரனின் இந்த 100 புதல்வர்களே கௌரவர்கள் என்றழைக்கப்பட்டனர்.
 ஒரு பெண்குழந்தை  துச்சலை ஆகும்.

கௌரவர்கள் பெயர்கள்

மகன்கள்

1) துரியோதனன்
2) துச்சாதனன்
3)துசாகன்
4)ஜலகந்தன்
5)சமன்
6)சகன்
7)விந்தன்
8)அனுவிந்தன்
9)துர்தர்சனன்
10)சுபாகு

11)துஷ்பிரதர்ஷனன்
12)துர்மர்ஷனன்
13)துர்முகன்
14)துஷ்கரன்
15)விவிகர்ணன்
16)விகர்ணன்
17)சலன்
18)சதவன்
19)சுலோசனன்
20)சித்ரன்

21)உபசித்ரன்
22)சித்ராட்சதன்
23)சாருசித்ரன்
24)சரசனன்
25)துர்மதன்
26)துர்விகன்
27)விவித்சு
28)விக்தனன்
29)உர்ணநாபன்
30)சுநாபன்

31)நந்தன்
32)உபநந்தன்
33)சித்திரபாணன்
34)சித்ரபாணன்
35)சித்திரவர்மன்
36)சுவர்மன்
37)துர்விமோசன்
38)மகாபாரு
39)சித்திராங்கன்
40)சித்திரகுண்டால

41)பிம்வேகன்
42)பிமுபன்
43)பாலகி
44)பாலவரதன்
45)உக்ரயுதன்
46)சுசேனன்
47)குந்தாதரன்
48)மகோதரன்
49)சித்ரயுதன்
50)நிஷாங்கி

51)பஷி
52)விருதகரன்
53)திரிதவர்மன்
54)திரிதட்சத்ரன்
55)சோமகீர்த்தி
56)அனுதரன்
57)திரிதசந்தன்
58)ஜராசங்கன்
59)சத்தியசந்தன்
60)சதஸ்

61)சுவாகன்
62)உக்ரச்ரவன்
63)உக்ரசேனன்
64)சேனானி
65)துஷ்பரஜை
66)அபராஜிதன்
67)குண்டசை
68)விசாலாட்சன்
69)துராதரன்
70)திரிதஹஸ்தன்

71)சுகஸ்தன்
72)வத்வேகன்
73)சுவர்ச்சன்
74)ஆடியகேது
75)பாவசி
76)நகாதத்தன்
77)அக்ரயாய
78)கவசி
79)கிராதன்
80)குண்டினன்

81)குண்டதரன்
82)தனுர்தரன்
83)பீமரதன்
84)வீரபாகு
85)அலோலுபன்
86)அபயன்
87)ருத்ரகர்மன்
88)திரிடரதச்ரயன்
89)அனாக்ருஷ்யன்
90)குந்தபேதி

91)விரவி
92)சித்திரகுண்டலகன்
93)தீர்கலோசன்
94)பிரமாதி
95)வீர்யவான்
96)தீர்கரோமன்
97)தீர்கபூ
98)மகாபாகு
99)குந்தாசி
100)விரஜசன்

மகள்

101)துச்சலை
          ********************



Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி