நாரதர்(பிரஜாபதி)

நாரதர்
(பிரஜாபதி)

பிரம்மாவின் மனதிலிருந்து  தோன்றியவர்கள் 
சனகாதி முனிவர்கள் ஆவர்

சனகர், 
சனந்தனர், 
சனாதனர்,
சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள்.

பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார்.

புலகர்
கிரது
நாரதர்
(பிரம்மாவின்  புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்)

 அவர்களில் ஒருவரான நாரதர் மட்டும் இல்லற வாழ்வில் ஈடுபட மறுத்துவிட்டார்.

அதனால் பிரம்மா கோபம் கொண்டு  நாரதரை மனிதப்பிறவி எடுத்து 50 பெண்களை திருமணம் செய்து கொண்டு சிற்றின்ப வாழ்வில் வாழ்வாய் என்றும் 
அதற்கு அடுத்த பிறவியில் எச்சில் உணவை உண்டாய் என்றும் சபித்தார்.

அதற்கு நாரத முனிவர் எப்பிறவி எடுத்தாலும் நான் நாராயணனின் பக்தனாக இருந்து நாராயணன் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

அதன்படி 
ஒரு கந்தர்வனுக்கு மகனாக பிறந்தார்.
உபபர்ஹனர்  என்ற பெயர்.
சித்திரரதன் என்பவனின் 50 மகள்களை மணநது சிற்றின்ப வாழ்வை வாழ்ந்து மறைந்து
பிறகு
மறு பிறவியில் காண்யகுப்ஜ தேசத்தின் அரசன் திரமிளன் - கலாவதி தம்பதிகளின் மகனாக நாரதன் என்ற பெயருடன் வாழ்ந்து வந்தார்.

 பிரம்மாவின் மகன்களான சனகாதி முனிவர்கள்  சாப்பிட்ட மீதியை அவர்களின் சகோதரனான நாரதன் சாப்பிட நேர்ந்தது.
 அத்துடன் அவரின் சாபம் நீங்கி மீண்டும் பிரம்மாவிடம் ஐக்கியமாகி மீண்டும் பிரம்மாவின் கழுத்தில் இருந்து நாரதர் பிறந்தார்.

திரிலோக சஞ்சாரி
(பூலோகம் மேலோகம் பாதாளலோகம் ஆகிய மூன்று லோகத்திலும் சென்று வரக் கூடியவர்)

கிளைக் கதைகள்

அ)ராமாயணத்தை எழுதிய வால்மீகிக்கு ராமநாமத்தை உபதேசித்தவர்
ஆ) பிரகலாதன் தாயின் கருவில் இருக்கும்போது நாராயணனின் பக்தன் ஆக்கியவர் 
இ)துருவனை விஷ்ணுவின் மந்திரத்தை ஒலிக்கச் செய்து நட்சத்திரமாக ஜொலிக்க செய்தவர்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி